எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வாழ்வில் வெற்றிகள் பல குவித்திட‌ . . .

01. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்பனைசெய்யுங்கள். இனி ஒவ் வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய் யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையு ங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும்.
02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்ப தற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங் கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் அதாவது படைப்பாற்றலின்
தாயே புதிய சிந்தனைதான்.
03.ஒருபிரச்சனையை வேதனை என்று கருதாதீர்கள் அப்படிக் கருதினால் அந்த வேதனை யை உங்கள் பிள்ளைகளுக்கு கொடு த்துவிடுவீர்கள். பிரச்சனையை ஒரு முட்டையாகவும் அதில் தங்கம் மறைந்திருக்கிறது என் றும் நினைத்தால் நீங்களே அந் தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பீர்கள்.
04.உங்கள்மனதை சுறுசுறுப்பாக்க 20 வழிகளைக்காணு ங்கள், அதுபோல சேம்பேறிக ளாக இருக்கும் பிள்ளைகளி ன் மனதையும் உற்சாகமாகத் தூண்டி விடுங்கள்.
05. ஆர்வமும் துடிப்பும் உள் ள சக்தியை நீங்கள் உருவா க்கினால் உங்கள் குடும்பம் பயனுள்ள ஓர் இலட்சியத் தை அடை யும்.
06. நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்புஎன்ற மலர் கசங்கிவிடும் என்ப தைப் புரிந்து கொள்ளுங்கள்.
07. வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறு ப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவ தைக் கண்டு பிடியுங்கள்.
08. சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத, இலேசாக, கனமில்லாத உணர்ச்சி யை அனுபவிக்கும் நிலைதான் சுவ ர்க்கமாகும்.
09. நமது கையில் ஆண்டவன் தந் து புவிக்கு அனுப்பி வைத் திருக்கும் அறிவாயுதம் விலை மதிப்பற்றதா கும், அதைப்பயன்படுத்தாவிட்டால் கழுதை சந்தனக்கட்டையை சுமந் து சென்று அதன் வாசம் புரியாமலே ஒருநாள் செத்தது போ ன்ற கதையாகிவிடும்.
10. ஓர் எண்ணத்தை நல்ல முறை யிலும் தெரிவிக்கலாம் கூடாத மு றையிலும் தெரிவிக்கலாம், நல்ல து கெட்டது நாம் தெரிவிக்கும் மு றையாலும் தீர்மானிக்கப்படுகிற து.
11. நமது தூய உணர்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளாததா ல்தான் மனம் திரும்பத் திரும்ப பேசுகிறது. ஒரு புலி இரை யை உன்னிப்பாக நோக்குவது போல எண்ணங்க ளை அவதானித்து ஒன்று இரண்டு என்று இலக்கமிடுங்கள் ஒரு கட்ட த்தில் அவை நின்று மனம் சாந்தியடையும்.
12.ஆணவத்தை விட்டு சரணடையும் போதுதான் ஆன்மீக உடல் வெளிப்படு கிறது. அப்போது இறைவன் அமுதக்கட லாக இருந் து உங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.
13. நாம் வாழ்க்கையின் கீழ் மட்ட த்தில் வாழ்ந்து கொண்டிருப்பதா ல் அதன் உயர்ந்த பரிமாணங்க ளைப்பற்றி பகுத்தறிந்து வாழும் ஆனந்தத்தை இழந்துவிடுகிறோம்
14. நீங்கள் தொடர்ந்து நல்ல வழி யில் சிந்தித்தால் நீங்கள் வெறும னே உள்ளமும் உடலும் மட்டுமல் ல அதற்கும் அப்பாலும் உள்ளவர் என்பதைக் கண்டு கொ ள்வீர்கள்.
15. உள் மன நிலைமைகளை விவேகத் துடன் கையாண்டு உங்களை அவமானப்படுத்தியதால் வரும் துன்பங்களை மறக்கக் கற்று க்கொள்ளுங்கள். அதை மனதில் வைத்திருந்தால் நல்ல சிந்தனைக ளின் வீச்சுக்கு தடையாகிவிடும்.
16. உள்மன நிலையை மாற்றிக் கொண்டால் அமைதியான வராக வும் அதிக சக் தி மிக்கவராகவும் நீங்கள் மாறிவிடுவீர்கள். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் மாட்டுப்பட்டு தவிக் கமாட்டீர்கள்.
17. மூட் அவுட் என்று பலர் கூறு வார்கள், நீங்கள் அதற்கு ஆட் பட்டுவிடக்கூடாது மூட் என்பது ஓடும் மேகங்களைப் போன்றது, அவ்வப்போது வரும் போகும் அதைக்கழற்றிவிட்டு இயல்பாக வாழப் பழக வேண்டும்.
18. இந்தக் கணத்தை ஆனந்தமாகக் கழி… நேற்றைய கெட்ட தினத்தையே எண்ணிக் குமைந்து கொண்டிருக்காதே.
19.பிணம் நீரில் இலகுவாக மித க்கும் ஆனால் மனிதன் நீரில் மூழ்கி இறந்துவிடுவான். மனித ன் நீரில் மூழ்கக்காரணம் அவ ன் நீருடன் சண்டை போடுகிறா ன். பிணம் நீருடன் சண்டையி டுவதில்லை ஆதலால் மிதக்கி றது. வாழ்க்கையை கடல் என்றுகூறுவார்கள் அந்தக் கடலு டன் சண்டையிட்டு மூழ்காது பிணம் போல இலகுவா க மித க்க வேண்டும்.
20. நீங்கள் டென்சனாக இருப்பதால்தா ன் சகல பிரச்சனைகளும் வருகிறது. பாம்மை டென்சனுடன் அணுகினால் தீண்டி விடும், இயல் பாக இருந்தால் வந்த வழியே போ ய்விடும்.
21. எதிரியையும் அன்புடன் நேசித்தால் பகை தானாக விலகி விடும். எந்தக் காரிய ம் செய்தாலும் அன் பின் சக்தியை பிர யோகியுங்கள்.
22. கோபமாக இருக் கும்போது மனம் பார மாக இருக்கும் அன் பாக இருக்கும்போது காற்றில் மிதக்கும் இதுதான் இறைவ னுடைய அருள் சுரக்கும் விதி.
23. புண்ணினால் ஆன காயம் ஆற சிறிது காலம் எடுப்பதை ப்போல கஷ்டங்களின் காயம்ஆறவும் சிறிதுகாலம் எடுக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங் கள்.
24.உடல், உணர்ச்சி, அறிவு ஆ கிய மூன்றையும் ஒன்றாக இ ணைத்து சமமாக ஓடவிட்டா ல் மாஜாஜாலம் போல பெரும் சக்தி உருவாகும். அப்போ து இந்தப் பிரபஞ்சம் தேஜோமயமாக மாறி சொல்ல முடியா த ஆனந் தத்தை ஏற்படுத்தும்.
25. யோகாவின் முக்கிய அம் சமே உடலை டென்சன், படப டப்பு இல்லாமல் தளர்ச்சியா க வைத்துக் கொள்வதுதான். அப்படி இருந்தால் உங்கள் உட லில் ஆரோக்கியமான இரசாயனங்கள் சுரக்கும்.

எந்த இந்தியனும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்கவோ குடியேறவோ முடியாது!- வரலாறு காணாத தகவல்!

“பூலோக சொர்க்கம்’ காஷ்மீர், இந்தியாவின் வட எல்லை யாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ் தான் ஆக்ரமித்து கொண்ட து மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. கா ஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தா னுக்கா. அல்லது தனி நாடா க இருக்க வேண்டுமா .. இன்றும் அணையாமல் பற் றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின்
ஆரம்பம் இது தான்.
காஷ்மீர் பிறந்த கதை:
வேத காலத்தில் அங்கு வாழ்ந்த காஷ்யப் முனிவரின் பெயரிலிருந்துதான், காஷ்மீர் என்ற பெயர் வந் தது. காஷ்யப் முனிவரின் கடும் தவத்தா ல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் “சட்டிஸர்’ என்ற பெரிய ஏரியின் நீர் ஒன்றிணைந்து பெரும்நதி உருவாகி, அப்பகுதியை செழி ப்படைய செய்தது. அவரின் தவத்தின் பய னாக, சிவபெருமான் தோன்றி, அப்பகுதி க்கு ஆசி வழங்கியதாகவும், அவர் தோ ன்றிய இடமே அமர்நாத் என்பதும் ஐதீகம் . இது ஸ்ரீநகரிலிருந்து 145 கி.மீ., தொலை வில் உள்ளது. அமர் நாத்தில் தோன்றும் சிவலிங்கத்தைக் காண, இன்றும் லட்சக்கண க்கான மக்கள் பயணிப்பது வாடிக்கை.
காஷ்மீரின் ஆட்சியாளர்கள்:
காஷ்யப்பின் மகன் நீல் என்ப வரே காஷ்மீரை முதலில் ஆட்சி செய்தவர். கி.மு.,322 முதல் கி.மு.,185 வரையிலான கால கட்டத்தில் மவுரிய பேர ரசும், கி.பி.100ல் குஷான் பேரரசும் காஷ்மீரை ஆட்சி செய் தன. கி.பி., 1200ம் கால கட்டத்தி ல் தான், காஷ்மீர் மண்ணில் இ ஸ்லாமியர்கள் காலூன்றினர். கி .பி., 1327ல் காஷ்மீரை ஆட்சி செய்த இந்து மன்னர் ரிச்சன் ஷா என்பவர், மத்திய ஆசியாவை சேர்ந்த, அப்துர் ரஹ்மான் புல்பு ல் என்பவரால் மதம் மாற்றப்பட் டார். உதைனா தேவாதான் காஷ்மீரை ஆட் சி செய்த கடைசி இந்து மன்னர். 1346ல் உதைனா தேவாவிடம் இருந்து, சம்சுதீ ன் லுடுட்மஸ் எனும் துருக்கி சுல் தான், ஆட்சியை கைப்பற் றினார். அடுத்த 4 நூற் றாண்டுகள், ஆப் கன் நாட்டினரின் கட்டுப்பாட்டில் காஷ் மீர் இருந்தது. 1586ல் முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சியின் கீழ் வந்தது. பின், முகலாயர்களை வீழ் த்திய துரானி பேரரசு, காஷ்மீரில் ஆட்சி அமைத்தது. அகமது ஷா து ரானி 1757 முதல் 1819 வரை காஷ் மீரின் மன்னராக இருந்தார். 1819ல் துரானியர்களை வீழ்த்திய ரஞ்சித் சிங், சீக்கிய ஆட்சியின் கீழ் காஷ்மீ ரை கொண்டு வந்தார். 1846ல் ஆங்கில அரசு, சீக்கிய ர்களை வீழ்த்தி, காஷ்மீரை கைபற்றியது.
காஷ்மீர் பிரச்சனை:
1947ல், காஷ்மீரின் மன்னரா க இருந்த ஹரி சிங், காஷ்மீ ரை இந்தியா உடன் இணை ப்பதா, பாகிஸ்தானுடன் இ ணைப்பதா அல்லது தனி நா டாக செயல்படுவதா என்ற குழப்பத்தில் முடிவு எடுக்க‍த் அதீத நாட்கள் எடுத்துக் கொ ண்டார்.பின் ஒருவழியாக இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். மன் ன‍ர் குழப்ப‍தில் இருந்த இந்த இடைப்பட்ட‍ காலத்தில்தான் பாகிஸ்தான் தனக்குச் சாதகமாக பயன்படுத் திக்கொண்டது, ஆம் கா ஷ்மீரின் ஒருபகுதியை ஆக்கிரம்மித்துக் கொண் டு, இன்றுவரை, அவர்கள் ஆக்கிரமித்த‍ காஷ்மீர் மட்டுமின்றி ஒட்டுமொத் த‍ காஷ்மீரும் தங்களுக் கே என்று சொந்தம் கொ ண்டாடி வருவது குறிப்பி டத்தக்க‍து.
இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்த‍ மன்ன‍ர் ஹரி சிங், ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, அரசியல் சட்டப்பி ரிவு 370, காஷ்மீரில் அமல்படுத் தப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சட்டப்பிரிவு, இங்கு நீக்கப்படாமல் அமலில் உள்ளது . இச்சட்டப்பிரிவின்படி, இந்தியா வில் பிற பகுதிகளில் வசிப்பவர் கள், ஜம்முகாஷ்மீர் மாநிலத்தி ல் உள்ள சொத்துக்களை வாங்க வோ, குடியேறவோ முடியாது.
காஷ்மீர் – மத அரசியலின் கூடா ரம்:
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை உள்ளடக்கியதேஜம்மு காஷ்மீர். காஷ்மீர் பிரி வினைவாத தலைவர்கள், சுய நலனுக்காக காஷ்மீரை பிரிக்க போராடுகின்றனர். அவ்வா று பிரிந்தால், பாகிஸ்தானுடன் இணைய முனைப்பு காட்டுவர் . சிறுநிலப் பகுதியான  காஷ்மீ ரில் போதிய வளங்கள் இல்லை; இங்கு வசிப்பவர்களில் பெ ரும் பாலானோர் முஸ்லிம்கள். இந்தியாவில் மகிழ்ச்சியாகவாழ்வதாக இவர்கள் கூறுகி ன்றனர். ஆனால், காஷமீர் பகுதி மக்கள் துன்பத்தில் தவிப்பதாக பிரிவினைவாதி கள் மட்டுமே கூறுகின்றனர். பாகிஸ்தானால் அபகரிக்கப் பட்ட காஷ்மீரில், காஷ்மீரி மொழி பேசப்படுவதில்லை. இவர்கள் காஷ்மீர் மக்களிட மிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். இதுதான் காஷ்மீரின் உண்மை யான வரலாறும் நிலைமையும்.