ஆப்பிள் நிறுவனத்தின் புதிய திட்டம்!!!

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்குத், நுகர்வோர்கள் இதுவரை காணவியலாத, சுரங்க தொழில் ஈடுப்பட அசெம்ப்ளி ரோபோக்களை தயாரிக்க சுமார் 10.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் போன்ற போட்டி நிறுவனங்களை முந்தும் நோக்கில், புதிய உற்பத்திப் பொருட்களுக்கான அடித்தளத்தை அமைப்பதில் மும்முரமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் இதர சாதனங்களை உற்பத்தி செய்வதின் பின்னணியில் இயங்கக்கூடிய இயந்திரங்களுக்கென அதிக அளவில் செலவு செய்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய திட்டம்!!!
புதிய ஐபோனாகிய 5சி -யின் வண்ணமயமான பிளாஸ்டிக், லேசர் ஆகியவற்றை பாலிஷ் செய்யக்கூடிய சாதனம், மேக் புக்கின் அலுமினிய அமைப்பை செதுக்கக்கூடிய அரவை இயந்திரங்கள், ஐபோன் மற்றும் ஐபேட் கேமரா லென்ஸ்களுக்கான டெஸ்டிங் கியர் போன்றவை இந்த இயந்திரங்களுள் சில, இந்நிறுவனத்தின் மிகப் பிரத்யேகமான உற்பத்தி செயல்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்த சில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஆப்பிள் நிறுவனம் இத்தாலியில் வரி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய வரி அதிகாரியிடமிருந்து சுமார் 1 பில்லியன் யூரோவுக்கு (1.34 மில்லியன் டாலர்) மேற்பட்ட தொகையை மறைத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், மிலனில் (Milan) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில் குட்டி வங்கி!!!: கரூர் வைஸ்யா வங்கியின் சூப்பர் திட்டம்..

 கரூர் வைஸ்யா வங்கி, கரூர் மாவட்டத்தின் பாலராஜாபுரம் என்னும் கிராமத்தில் தனது முதல் மிக சிறிய கிளையை திறந்ததுள்ளது.
இக்கிளையை ஆர்.பி.ஐயின் மன்டல தலைமை அதிகாரி ஜே. சடக்துள்ளா திறந்து வைத்தார். மேலும் இந்த வங்கியில் அடிப்படை வங்கி சேவைகளை அளிக்க கரூர் வைஸ்யா வங்கி திட்டமிட்டுள்ளது நாளிடையில் தேவைக்கு ஏற்ப வங்கி சேவைகளும் அதிகரிக்கப்படும் என அவ்வங்கியின் முத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.வி.பி.-யின் உயர் அதிகாரி திரு வெங்கட்ராமன் கூறுகையில் "இச் சிறிய கிளை வங்கியில் (ultra small branch) வர்த்தக தேவை அதிகரிக்க பொழுது இவ்வங்கி முழு செயல்ப்பாட்டுடன் செயல்படும்" என அவர் தெரிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கி இத்தகைய சிறிய வங்கிகளை நடப்பு நிதியாண்டில் 28 கிளைகளை திறக்கவும், அடுத்த ஆண்டில் மேலும் 24 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் முலம் சுமார் 117 கிராமங்களுக்கு வங்கி சேவையை அளிக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது. (கிராம மக்களுக்கு அது கண்டிப்பாக உதவும், நன்றி கே.வி.பி)
இத்திட்டத்தை பற்றி மேலும் திரு. வெங்கட்ராமன் கூறுகையில் "இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து கிராமங்களையும் எங்கள் வங்கி சேவை சென்றடைந்தது. இதன் விளைவாக சுமார் 37,579 வங்கி கணக்குகள் பையோமெட்ரிக் கார்டுகளின் மூலம் திறக்கப்பட்டது" என அவர் மிகுந்த மிகிழ்ச்சியுடன் தெரிவித்தார்

குழந்தைகளுக்கு பணத்தின் முக்கியதுவத்தை உணர்த்துவது சரியா??..

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பணம் தேவை. அதுவும் இன்றைய வாழ்வியல் முறையில் பணத்தின் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.அதனாலேயே பணம் ஒரு இன்றியமையாத படைப்பாக திகழ்கிறது. ஒரு பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தைகளுக்கு தரும் பரிசு வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடிய, ஒரு சிறந்த அன்பளிப்பு எதுவென்றால் அது அவர்களுக்கு பணம் குறித்த அறிவை புகட்டுவது தான்.
இன்றைய குழந்தைகளுக்கு பணத்தின் முக்கியதுவம் தெரிந்த அளவிற்கு அதனை பாதுகாக்க தெரிவதில்லை அதை உணர்த்துவது பெற்றோர்களின் தலையாயக் கடமையாகும். அவர்கள் வயதினையும் புரிந்துகொள்ளும் திறனையும் பொறுத்து பணம் பற்றிய உங்கள் அறிவாற்றலை அவர்கள் அறிந்துகொள்ளச் செய்யலாம். இது அவர்களின் வாழ்வின் பல கட்டங்களில் உதவும்.

பணத்தின் தேவை!!

பணம் பற்றிய அறிவை அவர்களுக்கு புகட்டுவதில் முதற்கட்டமாக பணம் ஏன் தேவைப்படுகிறது என்று விளக்கினால் அதை அவர்கள் காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.

ஆடம்பர செலவுகள்

பணத்தின் முக்கியத்துவத்தையும் ஆடம்பரங்களை முற்றிலும் ஒதுக்குவதையும் தகுந்த உதாரணங்களோடு குழந்தைகள் மனதில் பதியவைத்தால் அது அவர்கள் மனதில் நன்கு பதியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சன்மானம்!!..

பணத்தின் அருமையை புரியவைக்க உதாரணமாக ஒரு நூறு ருபாய் தற்போது இருப்பதை விட கடந்தகாலங்களில் எவ்வளவு மதிப்புடன் இருந்தது என்பதை விளக்கலாம். இதே வேளையில், அவர்கள் செலவுக்காக, சிறு வீட்டுவேலைகளை செய்ய வைத்து அதற்கு சன்மானமாக பணத்தை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். இதன் மூலம் பணம் நன்கு உழைத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற உண்மையை உணரத்தொடங்குவார்கள்