கனடா விண்வெளி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம்
வாஷிங்டன்,நவ.21(டி.என்.எஸ்) வியாழனைப் போன்ற புதிய கிரகம் ஒன்றை கனடா விண்வெளி விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
கந்தாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்தில் மேலும் ஒரு புதிய கிரகம் இருக்கும் இந்த கிரகம், சூரியனை விட 2 1/2 மடங்கு பெரியதாகவும், வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியதாகவும் காணப்பட்டது.
நெப்டியூனை விடவும் பெரியதாக உள்ள இந்த புதிய கிரகத்திற்கு 'சூப்பர் ஜூபிடர்' என்று பெயர் வைத்துள்ளனர். (டி.என்.எஸ்)
கந்தாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்தில் மேலும் ஒரு புதிய கிரகம் இருக்கும் இந்த கிரகம், சூரியனை விட 2 1/2 மடங்கு பெரியதாகவும், வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியதாகவும் காணப்பட்டது.
நெப்டியூனை விடவும் பெரியதாக உள்ள இந்த புதிய கிரகத்திற்கு 'சூப்பர் ஜூபிடர்' என்று பெயர் வைத்துள்ளனர். (டி.என்.எஸ்)
இந்தியாவுக்கு 4வது பதக்கம்: இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே இதுதான் 'பெஸ்ட்'!
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரும் இந்திய அணியினர், ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக 4 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 81 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் பாட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் இந்தியாவிற்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்றார். இதுவே லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும். அதன்பிறகு 25 மீ்ட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்து கொண்டார். இதில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய அவருக்கு, வெண்கலப் பதக்கம் உறுதியானது. இருப்பினும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை நிகோலா ஆதம்ஸிடம் தோல்வியை தழுவிய மேரி கோம் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் உட்பட மொத்தம் 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு கிடைத்த அதிகபட்சமாக பதக்கங்கள் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் மேரி கோம் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 3வது இந்திய பெண் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக கடந்த 2000ம் ஆண்டு சிட்டி ஒலிம்பிக் போட்டியில் கர்ணம் மல்லீஸ்வரியும், லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா நேவாலும் பதக்கம் வென்றுள்ளனர். மேற்கண்ட 3 இந்திய வீராங்கனைகளும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
115 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதற ஆரம்பித்துள்ள நியூசிலாந்து எரிமலை
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்த அசைவும் இல்லாமல் இருந்த தொன்காரிரோ எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அவ்வழியான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் நேற்று இரவு 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து தொன்காரியோ என்ற எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டது. மேலும் எரிமலையில் இருந்து புகையும், சாம்பலும் வெளியேறியது.
1897ம் ஆண்டு தான் இந்த எரிமலை கடைசியாக வெடித்தது. இந் நிலையில், கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக மவுனமாக இருந்து வந்த இந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் எரிமலையின் அருகே வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும் அவ்வழியான விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.
எரிமலையின் அருகே புகையும், சாம்பலும் எழுந்ததாகவும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது சாம்பல் அதிகளவில் வந்து விழுந்ததாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். எரிமலையை ஓட்டி செல்லும் சாலைகளிலும் அதிக அளவில் சாம்பல் கொட்டி கிடக்கிறது. இதனால் நெடுஞ்சாலைகள் நேற்று சிறிது நேரம் முடப்பட்டன.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி அதிகாரி பீட்டர் லிச்னர் கூறியதாவது, எரிமலை எப்போது வெடித்து சிதறும் என்பது தெரியவில்லை. இது ஒரு நீண்டகால எரிமலை வெடிப்பின் ஒரு துவக்கமாக கூட இருக்கலாம். மேலும் எரிமலை இரைச்சல், புகை போன்ற சம்பவங்களுடன் அப்படியே அமைதியாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.
எரிமலையில் இருந்து புகை எழும்பியதை நேரில் பார்த்த டிரக் டிரைவர் பிரையன் ரோடா என்பவர் கூறுகையில், எரிமலையில் இருந்து மேகம் போன்ற புகை எழும்பியதை பார்த்தேன். மேலும் சிறிது நேரத்திற்கு பிறகு, புகையின் நடுவில் ஆரஞ்சு நிறத்திலான தீ வெளிப்பட்டது என்றார்.
தொன்காரிரோ எரிமலையில் ஏற்பட்டு வரும் இயற்கை மாற்றம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அப்பகுதியினர், பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
ராஜ்யசபாவுக்கு மெய்டன் விசிட் அடித்த சச்சின்!
டெல்லி: கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் இன்று முதல் முறையாக ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட முதல் நாளிலேயே பெரும் அமளியை துமளியைப் பார்த்து விட்டுக் கிளம்பினார்.
கடந்த ஏப்ரல் 26ம் தேதி நியமன ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார் சச்சின். இதையடுத்து ஜூன் மாதத்தில் பதவியேற்றார் சச்சின். இதையடுத்து இன்று கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சச்சின் முதல் முறையாக கலந்து கொண்டார். ராஜ்யசபாவுக்கு முதல் முறையாக வந்த அவருக்கு பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அத்தனை எம்.பிக்களின் பார்வையும் இன்று சச்சின் மீதுதான் விழுந்திருந்தது. இதுகுறித்து சச்சின் கூறுகையில், இது எனக்குப் புதிய அனுபவம் என்றார்.
சச்சினுடன் அவரது மனைவி அஞ்சலியும் வந்திருந்தார். அவர் பார்வையாளர் வரிசையில் இருந்து தனது கணவரின் முதல் ராஜ்யசபா கூட்டத்தை பார்த்து மகிழ்ந்தார்.
சச்சினுடன் அவரது மனைவி அஞ்சலியும் வந்திருந்தார். அவர் பார்வையாளர் வரிசையில் இருந்து தனது கணவரின் முதல் ராஜ்யசபா கூட்டத்தை பார்த்து மகிழ்ந்தார்.
ராஜ்யசபாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவுடன் அவரது காரில் வந்தார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
போருக்கு தயாராகிறது ஈரான்
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின்(ஐ.ஏ.இ.ஏ) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரான் சென்றுள்ளது.
மேலும் தற்போது அணு சக்தி திட்டங்கள் குறித்த ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதான்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து பேசவுள்ளார்.
எனினும் ஈரான் விமான பாதுகாப்பு படை ஒத்திகை நடத்த தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல் அணு சக்தி நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கும் அணுசக்தி நிலையங்களுக்குமான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் முகமாக தென் ஈரானில் பெருமளவில் இராணுவ பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அண்ணா x அன்னா
பிறப்பு:
அண்ணா செப்டம்பர் 15- 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். ராணி அம்மாள் என்பவரை மணந்தார்.
அன்னா ஹசாரே ஜுன் 15- 1937-ல் மும்பை பிங்காரில் பிறந்தார். இவர் செல்லப் பெயர் கிசான் பாபு ராவ் ஹசாரே. இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
படிப்பு:
அண்ணா 1934-ல் பி.ஏ. (ஹானர்ஸ் ) சென்னை பச்சையப்பா கல்லுரியில் படித்து பட்டம் பெற்றார். பின் அதே கல்லுரியில் எம். ஏ. பட்டம் பெற்றார்.
அன்னா ஹசாரே ஏழாம் வகுப்போடு , குடும்ப சூழ் காரணமாக நின்று விட்டார்.
அண்ணா செப்டம்பர் 15- 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். ராணி அம்மாள் என்பவரை மணந்தார்.
அன்னா ஹசாரே ஜுன் 15- 1937-ல் மும்பை பிங்காரில் பிறந்தார். இவர் செல்லப் பெயர் கிசான் பாபு ராவ் ஹசாரே. இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
படிப்பு:
அண்ணா 1934-ல் பி.ஏ. (ஹானர்ஸ் ) சென்னை பச்சையப்பா கல்லுரியில் படித்து பட்டம் பெற்றார். பின் அதே கல்லுரியில் எம். ஏ. பட்டம் பெற்றார்.
அன்னா ஹசாரே ஏழாம் வகுப்போடு , குடும்ப சூழ் காரணமாக நின்று விட்டார்.
இளமை பருவம்:
அண்ணா ஆங்கிலப் பேராசிரியராக பச்சையப்பா உயர் நிலைப் பள்ளியில் சில காலம் பணியாற்றினார்.
அன்னா ஹசாரே , சிறு வயதிலேயே தன் குடும்பத்தைக் காப்பாற்ற , மும்பை தாதரில் பூ வியாபாரம் செய்து வந்தார். பின் ,ஒரு பூக்கடைக்குச் சொந்தக்காரராகி, தன் இரு சகோதரர் வசம் ஒப்படைத்தார்.
வேலை வாய்ப்பு:
அண்ணா சிறிது காலம் "ஜஸ்டிஸ் மேகசின் " பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணியாற்றி விட்டு "விடுதலை" பத்திரிக்கையில் ஆசிரியராக பொறுப்பேற்றார். கூடவே "குடியரசு" வார இதழிலும் பங்கேற்றார்.
அன்னா ஹசாரே - 1962-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஓட்டுனராக வேலையில் சேர்ந்தார்.
அரசியல்:
1944-ல் ஜஸ்டிஸ் கட்சி, பெரியார் தலைமையில் "திராவிடர் கழகம்" என பெயர் மாற்றப்பட்டு, தேர்தலில் நிற்க தயாரானது.
பெரியாரிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 1953-ம் ஆண்டு திரு. இ.வி.கே. சம்பத் அவர்களுடன் இனைந்து, "திராவிட முன்னேற்றக் கழகம்" அண்ணா தலைமையில் உருவானது.
"திராவிட நாடு திராவிடருக்கே" என்ற கொள்கயை முன் வைத்து, "தமிழ் நாடு தமிழருக்கே" -என்பதில் உறுதி ஏற்று மேடைகளில் முழங்கினார்.
பின்னர் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, தமிழ், ஆங்கிலம் மட்டுமே தேவை, இந்தி திணிப்பு கூடாது என, மத்திய அரசை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தார். சிறைத் தண்டனையும் பெற்றார்.
அன்னா ஹசாரே , 1965 - இந்தியா பாகிஸ்தான் சண்டையில் பாகிஸ்தான் பார்டரான கேம்கரன் என்ற இடத்தில் ராணுவ டிரக் ஓட்டுனராக பணி புரிந்த போது , நடந்த சம்பவம் ஹசாரே வாழ்வில் ஒரு திருப்பு மனைய ஏற்படுத்தியது.
அங்கு நடந்த குண்டு மழையில், அனைவரும் உயிரிழந்து ஹசாரே மட்டுமே பிழைத்தார்.
அதிலிருந்து, வாழ்க்கை என்பது நிரந்தரமல்ல, உயிருடன் இருக்கும் வரை ,மற்றவருக்காக வாழ வேண்டும் என உறுதி எடுத்து, ராணுவத்தில் இருந்து கட்டாய விருப்பு ஓய்வு எடுத்துக் கொண்டு தன் கிராமத்திற்குத் திரும்பினார்.
தன் கிராமத்தை , இந்தியாவின் முன் மாதிரி கிராமமாக மாற்ற , கிராம மக்களுடன் சேர்ந்து ,உழைத்து அதில் வெற்றியும் கண்டார்.
புகழ்:
1967-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் , பெரும்பான்மை வெற்றி பெற்று, அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டில் ஆட்சி அமைத்தது. அண்ணா தமிழக முதலமைச்சர் ஆனார்.
அண்ணாவின் ஆட்சியில் அவருக்கு புகழ் சேர்த்த திட்டங்கள்
1) ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம்.
2) சுய மரியாதை திருமண்ம்.
3) தமிழ் நாடு பெயர் மாற்றம்.
4)இரு மொழிக் கொள்கை.
அன்னா ஹசாரே - 1991 - முதல் "ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் " - ஒன்றை ஏற்படுத்தி, இன்று வரை போராடி வருகிறார்.
பட்டங்கள்:
அண்ணா வாங்கிய பட்டங்களில்முக்கியமானவை
1) அமெரிக்க யேல் பல்கலைக் கழக முனைவர் பட்டம்.
2) அண்ணாமலைப் பல்கலை கழக டாக்டரேட் பட்டம்.
அன்னா ஹசாரே வாங்கிய பட்டங்கள்.
1) பத்ம ஸ்ரீ (1990 )
2) பத்ம பூசன் ( 1992 )
வாங்கிய பதக்கங்கள்
1) சைன்ய சேவா பதக்கம்
2) ஒன்பது வருட ராணுவ சேவை பதக்கம்
3) சங்க்ரம் பதக்கம்
4) 25-வது சுதந்திர ஆண்டு விழா பதக்கம்
5)பெசிமி நட்சத்திர பதக்கம்.
தியாகம்:
அண்ணாவும், அன்னா ஹசாரேவும் தன்னலமற்ற தியாகிகள் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இருவருமே தனக்காக எதுவுமே சேர்த்துக் கொள்ளாமல் நாட்டுக்காக உழைத்த உத்தமர்கள்.
அண்ணா கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு 1969ஆம் ஆண்டு பிப்.3-ல் உயிர் நீத்தார்.
அன்னா ஹசாரே, லோக்பால் மசோதா மூலம், உலகப் புகழ் பெற்று ,வாழ்ந்து கொண்டு இருக்கும் இவரையாவது நம் நாட்டு மக்கள் பயன் படுத்தி, இந்தியாவை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு கண்ட, வல்லரசாக மாற்ற அனைவரும் பாடுபடுவோம்.
அண்ணா ஆங்கிலப் பேராசிரியராக பச்சையப்பா உயர் நிலைப் பள்ளியில் சில காலம் பணியாற்றினார்.
அன்னா ஹசாரே , சிறு வயதிலேயே தன் குடும்பத்தைக் காப்பாற்ற , மும்பை தாதரில் பூ வியாபாரம் செய்து வந்தார். பின் ,ஒரு பூக்கடைக்குச் சொந்தக்காரராகி, தன் இரு சகோதரர் வசம் ஒப்படைத்தார்.
வேலை வாய்ப்பு:
அண்ணா சிறிது காலம் "ஜஸ்டிஸ் மேகசின் " பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணியாற்றி விட்டு "விடுதலை" பத்திரிக்கையில் ஆசிரியராக பொறுப்பேற்றார். கூடவே "குடியரசு" வார இதழிலும் பங்கேற்றார்.
அன்னா ஹசாரே - 1962-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஓட்டுனராக வேலையில் சேர்ந்தார்.
அரசியல்:
1944-ல் ஜஸ்டிஸ் கட்சி, பெரியார் தலைமையில் "திராவிடர் கழகம்" என பெயர் மாற்றப்பட்டு, தேர்தலில் நிற்க தயாரானது.
பெரியாரிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 1953-ம் ஆண்டு திரு. இ.வி.கே. சம்பத் அவர்களுடன் இனைந்து, "திராவிட முன்னேற்றக் கழகம்" அண்ணா தலைமையில் உருவானது.
"திராவிட நாடு திராவிடருக்கே" என்ற கொள்கயை முன் வைத்து, "தமிழ் நாடு தமிழருக்கே" -என்பதில் உறுதி ஏற்று மேடைகளில் முழங்கினார்.
பின்னர் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, தமிழ், ஆங்கிலம் மட்டுமே தேவை, இந்தி திணிப்பு கூடாது என, மத்திய அரசை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தார். சிறைத் தண்டனையும் பெற்றார்.
அன்னா ஹசாரே , 1965 - இந்தியா பாகிஸ்தான் சண்டையில் பாகிஸ்தான் பார்டரான கேம்கரன் என்ற இடத்தில் ராணுவ டிரக் ஓட்டுனராக பணி புரிந்த போது , நடந்த சம்பவம் ஹசாரே வாழ்வில் ஒரு திருப்பு மனைய ஏற்படுத்தியது.
அங்கு நடந்த குண்டு மழையில், அனைவரும் உயிரிழந்து ஹசாரே மட்டுமே பிழைத்தார்.
அதிலிருந்து, வாழ்க்கை என்பது நிரந்தரமல்ல, உயிருடன் இருக்கும் வரை ,மற்றவருக்காக வாழ வேண்டும் என உறுதி எடுத்து, ராணுவத்தில் இருந்து கட்டாய விருப்பு ஓய்வு எடுத்துக் கொண்டு தன் கிராமத்திற்குத் திரும்பினார்.
தன் கிராமத்தை , இந்தியாவின் முன் மாதிரி கிராமமாக மாற்ற , கிராம மக்களுடன் சேர்ந்து ,உழைத்து அதில் வெற்றியும் கண்டார்.
புகழ்:
1967-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் , பெரும்பான்மை வெற்றி பெற்று, அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டில் ஆட்சி அமைத்தது. அண்ணா தமிழக முதலமைச்சர் ஆனார்.
அண்ணாவின் ஆட்சியில் அவருக்கு புகழ் சேர்த்த திட்டங்கள்
1) ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம்.
2) சுய மரியாதை திருமண்ம்.
3) தமிழ் நாடு பெயர் மாற்றம்.
4)இரு மொழிக் கொள்கை.
அன்னா ஹசாரே - 1991 - முதல் "ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் " - ஒன்றை ஏற்படுத்தி, இன்று வரை போராடி வருகிறார்.
பட்டங்கள்:
அண்ணா வாங்கிய பட்டங்களில்முக்கியமானவை
1) அமெரிக்க யேல் பல்கலைக் கழக முனைவர் பட்டம்.
2) அண்ணாமலைப் பல்கலை கழக டாக்டரேட் பட்டம்.
அன்னா ஹசாரே வாங்கிய பட்டங்கள்.
1) பத்ம ஸ்ரீ (1990 )
2) பத்ம பூசன் ( 1992 )
வாங்கிய பதக்கங்கள்
1) சைன்ய சேவா பதக்கம்
2) ஒன்பது வருட ராணுவ சேவை பதக்கம்
3) சங்க்ரம் பதக்கம்
4) 25-வது சுதந்திர ஆண்டு விழா பதக்கம்
5)பெசிமி நட்சத்திர பதக்கம்.
தியாகம்:
அண்ணாவும், அன்னா ஹசாரேவும் தன்னலமற்ற தியாகிகள் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இருவருமே தனக்காக எதுவுமே சேர்த்துக் கொள்ளாமல் நாட்டுக்காக உழைத்த உத்தமர்கள்.
அண்ணா கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு 1969ஆம் ஆண்டு பிப்.3-ல் உயிர் நீத்தார்.
அன்னா ஹசாரே, லோக்பால் மசோதா மூலம், உலகப் புகழ் பெற்று ,வாழ்ந்து கொண்டு இருக்கும் இவரையாவது நம் நாட்டு மக்கள் பயன் படுத்தி, இந்தியாவை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு கண்ட, வல்லரசாக மாற்ற அனைவரும் பாடுபடுவோம்.
கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு! Read more about கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
தனுஷ் எழுதிப் பாடி நடித்துள்ள கொலவெறி பாடல் இணையத்தால் பெரும் ஆரவார வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் அதற்கு தமிழ்நெறியாளர்கள், கவிஞர்கள், பிறமொழி பாடகர்கள், கவிஞர்களும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணினி வல்லுநர் ஜெர்ரி ஸ்டாலின், அதேபோன்ற தாள லயத்துடன் தமிழ்நெறியைப் புகழ்ந்து எழுதியுள்ள பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யூ ட்யூப் தளத்தில் இப்பாடலை இதுவரை 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர்வரை பார்த்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
அப்பாடல் இங்கே வரிவடிவில்:
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
அப்பாடல் இங்கே வரிவடிவில்:
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…
Subscribe to:
Comments (Atom)








