டெல்லி, மார்ச். (டி.என்.எஸ்) இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வியோடு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படவுள்ள மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பியிருக்கும் ராகுல் காந்திக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக, காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க கூட்டணியும் பரபரப்பாக களத்தில் இயங்கி வருகிறது. இதில் காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களும் அதற்கு பச்சைக்கொடி காட்டி வருகிறார்கள். அதேபோல் பா.ஜ.க சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்றும், அதற்கு பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் விப்பமும் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் `அடுத்த பிரதமர் யார்?' என்ற கருத்து கணிப்பை தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்று கேள்வி கேட்கப்பட்டது.
மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, நரேந்திர மோடி, ராகுல் உள்பட சிலரது பெயர்களும் கொடுக்கப்பட்டன. கருத்து கணிப்புகளில் பங்கேற்றவர்கள் இந்த பெயர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய கூறப்பட்டிருந்தனர். கருத்துக்கணிப்பு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 43 சதவீதம் பேரின் ஆதரவை பெற்று முதல் இடத்தை பிடித்தார்.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ நகரங்களில் நரேந்திர மோடிக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது. பெண்களை விட ஆண்கள்தான் நரேந்திரமோடிக்கு அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு கருத்து கணிப்பில் 2வது இடமே கிடைத்துள்ளது.
இந்திய நகரங்களில் பெங்களூரில் மட்டுமே ராகுல்காந்திக்கு ஆதரவு உள்ளது என்றும், மற்ற அனைத்து நகரங்களிலும் ராகுலுக்கு எதிர்ப்பு அலையே காணப்படுகிறது என்று தெரிவித்துள்ள தனியார் நிறுவனம், ராகுலுக்கு ஆண்களை விட பெண்களிடம் அதிக ஆதரவு இருப்பது கூறியுள்ளது. (டி.என்.எஸ்)
விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக, காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க கூட்டணியும் பரபரப்பாக களத்தில் இயங்கி வருகிறது. இதில் காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களும் அதற்கு பச்சைக்கொடி காட்டி வருகிறார்கள். அதேபோல் பா.ஜ.க சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்றும், அதற்கு பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் விப்பமும் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் `அடுத்த பிரதமர் யார்?' என்ற கருத்து கணிப்பை தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்று கேள்வி கேட்கப்பட்டது.
மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, நரேந்திர மோடி, ராகுல் உள்பட சிலரது பெயர்களும் கொடுக்கப்பட்டன. கருத்து கணிப்புகளில் பங்கேற்றவர்கள் இந்த பெயர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய கூறப்பட்டிருந்தனர். கருத்துக்கணிப்பு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 43 சதவீதம் பேரின் ஆதரவை பெற்று முதல் இடத்தை பிடித்தார்.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ நகரங்களில் நரேந்திர மோடிக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது. பெண்களை விட ஆண்கள்தான் நரேந்திரமோடிக்கு அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு கருத்து கணிப்பில் 2வது இடமே கிடைத்துள்ளது.
இந்திய நகரங்களில் பெங்களூரில் மட்டுமே ராகுல்காந்திக்கு ஆதரவு உள்ளது என்றும், மற்ற அனைத்து நகரங்களிலும் ராகுலுக்கு எதிர்ப்பு அலையே காணப்படுகிறது என்று தெரிவித்துள்ள தனியார் நிறுவனம், ராகுலுக்கு ஆண்களை விட பெண்களிடம் அதிக ஆதரவு இருப்பது கூறியுள்ளது. (டி.என்.எஸ்)
No comments:
Post a Comment