ரியாத் -தம்மாம் அதி வேக ரயில் வந்து விட்டது!





எந்த ஆடம்பர விழாக்களும் இல்லை. 'தலைவர் வாழ்க' 'அம்மா வாழ்க' என்ற கோஷம் இல்லை. திறப்பு விழாவுக்கு மந்திரி வருகிறார் என்று ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து தடை செய்யப்படவில்லை. சத்தமின்றி ஒரு சாதனை எந்த ஆரவாரமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விரிவாக்க வேலைகளும் தொடர்கிறது.

அதி வேக விரைவு ரயில் தம்மாமுக்கும் ரியாத்துக்கும் இடையே இன்னும் 60 நாளில் ஓடத் துவங்கும். தம்மாம் அப்துல் அஜீஸ் துறைமுகத்தில் அதி வேக ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது இந்த ரயில். இதன் வேகம் மணிக்கு 180 கிலோ மீட்டராக பிறகு அதிகரிக்கப்படும்.

தற்போது ரியாத் முழுக்க மெட்ரோ பணி மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த வேலையும் முடிந்தால் ரியாத்தில் அதிக நேரம் சிக்னலில் காத்திருக்கும் அவலம் குறையலாம். இந்த பணியும் எந்த ஆரவாரமும் இல்லாமல் மிக துரிதமாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment