ஒவ்வொரு மனிதனுக்கும் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பணம் தேவை. அதுவும் இன்றைய வாழ்வியல் முறையில் பணத்தின் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.அதனாலேயே பணம் ஒரு இன்றியமையாத படைப்பாக திகழ்கிறது. ஒரு பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தைகளுக்கு தரும் பரிசு வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடிய, ஒரு சிறந்த அன்பளிப்பு எதுவென்றால் அது அவர்களுக்கு பணம் குறித்த அறிவை புகட்டுவது தான்.
இன்றைய குழந்தைகளுக்கு பணத்தின் முக்கியதுவம் தெரிந்த அளவிற்கு அதனை பாதுகாக்க தெரிவதில்லை அதை உணர்த்துவது பெற்றோர்களின் தலையாயக் கடமையாகும். அவர்கள் வயதினையும் புரிந்துகொள்ளும் திறனையும் பொறுத்து பணம் பற்றிய உங்கள் அறிவாற்றலை அவர்கள் அறிந்துகொள்ளச் செய்யலாம். இது அவர்களின் வாழ்வின் பல கட்டங்களில் உதவும்.
பணத்தின் தேவை!!
பணம் பற்றிய அறிவை அவர்களுக்கு புகட்டுவதில் முதற்கட்டமாக பணம் ஏன் தேவைப்படுகிறது என்று விளக்கினால் அதை அவர்கள் காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.
ஆடம்பர செலவுகள்
பணத்தின் முக்கியத்துவத்தையும் ஆடம்பரங்களை முற்றிலும் ஒதுக்குவதையும் தகுந்த உதாரணங்களோடு குழந்தைகள் மனதில் பதியவைத்தால் அது அவர்கள் மனதில் நன்கு பதியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
சன்மானம்!!..
பணத்தின் அருமையை புரியவைக்க உதாரணமாக ஒரு நூறு ருபாய் தற்போது இருப்பதை விட கடந்தகாலங்களில் எவ்வளவு மதிப்புடன் இருந்தது என்பதை விளக்கலாம். இதே வேளையில், அவர்கள் செலவுக்காக, சிறு வீட்டுவேலைகளை செய்ய வைத்து அதற்கு சன்மானமாக பணத்தை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். இதன் மூலம் பணம் நன்கு உழைத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற உண்மையை உணரத்தொடங்குவார்கள்
No comments:
Post a Comment