கரூர் வைஸ்யா வங்கி, கரூர் மாவட்டத்தின் பாலராஜாபுரம் என்னும் கிராமத்தில் தனது முதல் மிக சிறிய கிளையை திறந்ததுள்ளது.
இக்கிளையை ஆர்.பி.ஐயின் மன்டல தலைமை அதிகாரி ஜே. சடக்துள்ளா திறந்து வைத்தார். மேலும் இந்த வங்கியில் அடிப்படை வங்கி சேவைகளை அளிக்க கரூர் வைஸ்யா வங்கி திட்டமிட்டுள்ளது நாளிடையில் தேவைக்கு ஏற்ப வங்கி சேவைகளும் அதிகரிக்கப்படும் என அவ்வங்கியின் முத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.வி.பி.-யின் உயர் அதிகாரி திரு வெங்கட்ராமன் கூறுகையில் "இச் சிறிய கிளை வங்கியில் (ultra small branch) வர்த்தக தேவை அதிகரிக்க பொழுது இவ்வங்கி முழு செயல்ப்பாட்டுடன் செயல்படும்" என அவர் தெரிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கி இத்தகைய சிறிய வங்கிகளை நடப்பு நிதியாண்டில் 28 கிளைகளை திறக்கவும், அடுத்த ஆண்டில் மேலும் 24 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் முலம் சுமார் 117 கிராமங்களுக்கு வங்கி சேவையை அளிக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது. (கிராம மக்களுக்கு அது கண்டிப்பாக உதவும், நன்றி கே.வி.பி)
இத்திட்டத்தை பற்றி மேலும் திரு. வெங்கட்ராமன் கூறுகையில் "இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து கிராமங்களையும் எங்கள் வங்கி சேவை சென்றடைந்தது. இதன் விளைவாக சுமார் 37,579 வங்கி கணக்குகள் பையோமெட்ரிக் கார்டுகளின் மூலம் திறக்கப்பட்டது" என அவர் மிகுந்த மிகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
No comments:
Post a Comment