2013ஆம் ஆண்டுக்குள் 8000 கிளைகள் துவக்கம் : அரசு வங்கிகள் இலக்கு

டெல்லி, ஜூலை 03 (டி.என்.எஸ்) இந்தியாவில் அரசு நடத்தும் வங்கிகள் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 8000 கிளைகளை துவக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு மானியத் தொகைகளை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளிலேயே பரிமாற்றம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் அதாவது 1.2 பில்லியன் மக்கள் இதுவரை வங்கிச் சேவையைப் பெறவில்லை. எனவே, கிராமப் பகுதி மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கும் வகையில் அரசு நடத்தும் வங்கியின் கிளைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். (டி.என்.எஸ்)

விமான போக்குவரத்தில் அடியெடுத்து வைக்கும் டாடா சன்ஸ்

டெல்லி, ஜூலை 01 (டி.என்.எஸ்) இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறையில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா சன்ஸ் நிறுவனம் மீண்டும் நுழைகிறது.

குறைந்த கட்டணத்தில் விமான சேவையை இந்தியாவில் துவக்க உள்ளது ஏர் ஏசியா நிறுவனம். இதற்காக, அனுமதி மற்றும் விமானப் போக்குவரத்துக்கான சான்றிதழையும் பெற காத்திருக்கிறது ஏர் ஏசியா.

ஏர் ஏசியா மற்றும் டாடா சன்ஸ் இணைந்து இந்த சேவையை செய்ய உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவை துவக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (டி.என்.எஸ்)

நோக்கியா ஆஷா 501 ஸ்மார் ஃபோன் அறிமுகம்

சென்னை, ஜூலை 02 (டி.என்.எஸ்) முன்னணி செல்போன்கள் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, புதிய ஆஷா தளத்தில் இயங்கும் அடுத்த தலைமுறைக்கான 'ஆஷா 501' என்ற புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய போனின் அறிமுக விழா இன்று (ஜூலை 2) சென்னையில் நடைபெற்றது. இதில் நோக்கியா நிறுவனத்தின் தென் பிராந்தியப் பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் கலந்துகொண்டு ஆஷா 501 போனை அறிமுகப்படுத்தினார்.

ப்ரைட் ரெட், மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது.

98 கிராம் எடை கொண்ட இந்த போனின் கேகரா 3.2 எம்.பி, இரட்டை சிம் ஸ்டாண்ட்பை டைம் - 26 நாட்கள் வரை, டாக் டைம்-17 மணி நேரம் வரை, கூடுதல் மெமரி 4ஜிபி (கார்ட் இன் பாக்ஸ்), 32 ஜிபி வரை விரிவுபடுத்தும் வசதி, 40 இலவச இஏ கேம்ஸ் கிஃப்ட் பேக், 50 ப்ரீலோட் அப்ளிகேஷன்ஸ், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதங்களுக்கான இலவச முகநூல், 4 ஜிபி மைரோ எஸ்டி கார்ட் இன் பாக்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த போனின் விலை ரூ.5199 ஆகும்.

இந்த புதிய நோக்கியா ஆஷா 501 போனை அறிமுகப்படுத்தி பேசிய, நோக்கியா நிறுவனத்தின் தென் பிராந்தியப் பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் பேசுகையில், "அனைவருக்கும் ஏற்ற விலையில், கண்கவர் வண்ணத்தில், கவர்ச்சியான வடிவமைப்பில், அதிசயிக்கத்தக்க நம்ப முடியாத விலையில் நோக்கிய ஆஷா 501 அறிமுகமாகி உள்ளது. உங்களுக்குப் பிடித்தமான கடந்த, நிகழ் மற்றும் எதிர்கால அம்சங்களுக்கு இதில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்ட்லேன் தொழில்நுட்பம் உதவும். புதிய விலையில், உயரிய தரத்தில், நவீன தொழிநுட்பங்களை வாடிக்கையாளர் விருப்பங்களுக்கேற்ப வழங்குவதைக் கொள்கையாக வைத்துள்ளோம். அந்த வகையில் நோக்கியா ஆஷா 501 புதிய கோணத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் என நம்புகிறோம்." என்று தெரிவித்தார்.  (டி.என்.எஸ்)
Jul 02, 2013