சென்னை, ஜூலை 02 (டி.என்.எஸ்) முன்னணி செல்போன்கள் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, புதிய ஆஷா தளத்தில் இயங்கும் அடுத்த தலைமுறைக்கான 'ஆஷா 501' என்ற புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய போனின் அறிமுக விழா இன்று (ஜூலை 2) சென்னையில் நடைபெற்றது. இதில் நோக்கியா நிறுவனத்தின் தென் பிராந்தியப் பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் கலந்துகொண்டு ஆஷா 501 போனை அறிமுகப்படுத்தினார்.
ப்ரைட் ரெட், மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது.
98 கிராம் எடை கொண்ட இந்த போனின் கேகரா 3.2 எம்.பி, இரட்டை சிம் ஸ்டாண்ட்பை டைம் - 26 நாட்கள் வரை, டாக் டைம்-17 மணி நேரம் வரை, கூடுதல் மெமரி 4ஜிபி (கார்ட் இன் பாக்ஸ்), 32 ஜிபி வரை விரிவுபடுத்தும் வசதி, 40 இலவச இஏ கேம்ஸ் கிஃப்ட் பேக், 50 ப்ரீலோட் அப்ளிகேஷன்ஸ், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதங்களுக்கான இலவச முகநூல், 4 ஜிபி மைரோ எஸ்டி கார்ட் இன் பாக்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த போனின் விலை ரூ.5199 ஆகும்.
இந்த புதிய நோக்கியா ஆஷா 501 போனை அறிமுகப்படுத்தி பேசிய, நோக்கியா நிறுவனத்தின் தென் பிராந்தியப் பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் பேசுகையில், "அனைவருக்கும் ஏற்ற விலையில், கண்கவர் வண்ணத்தில், கவர்ச்சியான வடிவமைப்பில், அதிசயிக்கத்தக்க நம்ப முடியாத விலையில் நோக்கிய ஆஷா 501 அறிமுகமாகி உள்ளது. உங்களுக்குப் பிடித்தமான கடந்த, நிகழ் மற்றும் எதிர்கால அம்சங்களுக்கு இதில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்ட்லேன் தொழில்நுட்பம் உதவும். புதிய விலையில், உயரிய தரத்தில், நவீன தொழிநுட்பங்களை வாடிக்கையாளர் விருப்பங்களுக்கேற்ப வழங்குவதைக் கொள்கையாக வைத்துள்ளோம். அந்த வகையில் நோக்கியா ஆஷா 501 புதிய கோணத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் என நம்புகிறோம்." என்று தெரிவித்தார். (டி.என்.எஸ்)
இந்த புதிய போனின் அறிமுக விழா இன்று (ஜூலை 2) சென்னையில் நடைபெற்றது. இதில் நோக்கியா நிறுவனத்தின் தென் பிராந்தியப் பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் கலந்துகொண்டு ஆஷா 501 போனை அறிமுகப்படுத்தினார்.
ப்ரைட் ரெட், மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது.
98 கிராம் எடை கொண்ட இந்த போனின் கேகரா 3.2 எம்.பி, இரட்டை சிம் ஸ்டாண்ட்பை டைம் - 26 நாட்கள் வரை, டாக் டைம்-17 மணி நேரம் வரை, கூடுதல் மெமரி 4ஜிபி (கார்ட் இன் பாக்ஸ்), 32 ஜிபி வரை விரிவுபடுத்தும் வசதி, 40 இலவச இஏ கேம்ஸ் கிஃப்ட் பேக், 50 ப்ரீலோட் அப்ளிகேஷன்ஸ், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதங்களுக்கான இலவச முகநூல், 4 ஜிபி மைரோ எஸ்டி கார்ட் இன் பாக்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த போனின் விலை ரூ.5199 ஆகும்.
இந்த புதிய நோக்கியா ஆஷா 501 போனை அறிமுகப்படுத்தி பேசிய, நோக்கியா நிறுவனத்தின் தென் பிராந்தியப் பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் பேசுகையில், "அனைவருக்கும் ஏற்ற விலையில், கண்கவர் வண்ணத்தில், கவர்ச்சியான வடிவமைப்பில், அதிசயிக்கத்தக்க நம்ப முடியாத விலையில் நோக்கிய ஆஷா 501 அறிமுகமாகி உள்ளது. உங்களுக்குப் பிடித்தமான கடந்த, நிகழ் மற்றும் எதிர்கால அம்சங்களுக்கு இதில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்ட்லேன் தொழில்நுட்பம் உதவும். புதிய விலையில், உயரிய தரத்தில், நவீன தொழிநுட்பங்களை வாடிக்கையாளர் விருப்பங்களுக்கேற்ப வழங்குவதைக் கொள்கையாக வைத்துள்ளோம். அந்த வகையில் நோக்கியா ஆஷா 501 புதிய கோணத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் என நம்புகிறோம்." என்று தெரிவித்தார். (டி.என்.எஸ்)
Jul 02, 2013
No comments:
Post a Comment