2013ஆம் ஆண்டுக்குள் 8000 கிளைகள் துவக்கம் : அரசு வங்கிகள் இலக்கு

டெல்லி, ஜூலை 03 (டி.என்.எஸ்) இந்தியாவில் அரசு நடத்தும் வங்கிகள் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 8000 கிளைகளை துவக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு மானியத் தொகைகளை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளிலேயே பரிமாற்றம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் அதாவது 1.2 பில்லியன் மக்கள் இதுவரை வங்கிச் சேவையைப் பெறவில்லை. எனவே, கிராமப் பகுதி மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கும் வகையில் அரசு நடத்தும் வங்கியின் கிளைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். (டி.என்.எஸ்)

No comments:

Post a Comment