ஐயாயிரம் போலீஸ் குவிப்பு: உயர்அதிகாரி சென்னை வருகை

சென்னை, ஜன.12 (டிஎன்எஸ்) தேசிய பாதுகாப்புப்படை இயக்குனர் அலாக் இன்று திடீரென சென்னைக்கு வருகை தந்தார். மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் நடமாட்டும் மற்றும் ஊடுருவலை தடுக்க தேசிய பாதுகாப்புப்படை மையங்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அமைக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை, நடைபெற உள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் புதுதில்லியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை இயக்குனர் அலாக், ஐஜி பரத்வாஜ் ஆகியோர் இன்று காலை 9.30 மணி அளவில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் உயர் அதிகாரிகளுடன் இன்று பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

போலீஸ் குவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் மெரீனா போன்ற கடற்கரைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை நகர போலீசார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாளை போகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், பழைய டயர்கள், டியூப்கள் போன்றவற்றை தீயிட்டு கொளுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காற்றை மாசுப்படுத்தும் இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியதாகும். மேலும் குடிசைப் பகுதிகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவற்றில் தீ விபத்து ஏற்பட வழி வகுக்கும். எனவே பொதுமக்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

எனினும் மாட்டுச்சாணம், பழைய மரக்கட்டைகள் போன்றவற்றை பாதுகாப்பாக எரித்து போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு எவ்வித தடையும் இல்லை.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் மெரீனா போன்ற கடற்கரைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

15ஆம் தேதி திருவள்ளூவர் தினத்தன்று மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. 16ஆம் தேதி காணும் பொங்கலையொட்டி மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மெரினா கடற்கரையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், கேமராக்கள் பொருத்தப்பட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் உடைந்த கப்பல் உள்ள பகுதியிலும், மெரினா கடலிலும் மக்கள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படு கிறது. கடலில் படகு சவாரியும் தடை செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களின் நலன் கருதி கடற்கரை பகுதிகளில் 35 மீனவர்கள் அடங்கிய உயிர் காக்கும் நீச்சல் மீட்புக் குழுக்களும், முதலுதவி அளிக்க மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

சமூக விரோதிகள் மற்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கையும், களவுமாக பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அவசர உதவிக்கு 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் தகவல் கொடுக்கும்படி காவல் துறை கேட்டுக் கொள்கிறது. (டிஎன்எஸ்)

No comments:

Post a Comment