இப்படத்தில் கதாநாயகியின் அம்மாவுக்கும் கதாநாயகனுக்கும் நடக்கும் நீயா? நானா? போட்டியே படத்தின் முக்கிய அம்சம். முந்தைய 'மாப்பிள்ளை' படத்தில் ரஜினிக்கு மாமியாராக நடித்தவர் ஸ்ரீவித்யா, இப்போதைய 'மாப்பிளை' படத்தில் தனுஷுக்கு மாமியாராக நடிகைகள் பலரைப் பரிசீலித்து. கடைசியாக ஸ்ரீதேவி நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தீர்மானித்து அவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு ஸ்ரீதேவியும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அவர் தெரிவித்த சம்மதத்திற்குக் கேட்டிருக்கும் சம்பளம், ஒரு கோடியாம். முந்நாள் நடிகையாக இருந்தாலும் இந்நாள் நடிகையின் சம்பளமா! என்று தமிழ்த் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி
No comments:
Post a Comment