இதைப் பற்றிப் பேசிய செல்வராகவன், 'சோனியா அகர்வால் தொலைக்காட்சித் தொடரில் நடித்தது எனக்குப் பிடிக்கவில்லை; அதனால் தான் எங்களுக்குள் பிரச்சினை உருவானது என்பதெல்லாம் உன்மை இல்லை. சோனியாவைத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க உற்சாகப்படுத்தியதே நான் தான்' என்றார்.
'என் தொழிலுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்த நான் சோனியாவுக்காக நேரம் ஒதுக்கவில்லை. இதை அவர் என்னிடம் எதிர் பார்த்திருக்கலாம். அது மட்டும் இன்றி, தேனியைச் சேர்ந்தவன் நான்; சோனியா சண்டிகரைச் சார்ந்தவர். எங்களுக்குள் இருக்கும் கலாசார வேறுபாடும் ஒரு வகையில் எங்களுக்குப் பிரச்சினையாக இருந்திருக்கலாம்' என்றார்.
'இருப்பினும் சோனியா அகர்வாலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அவர் என்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். நாங்கள் கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
'மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் எனக்கில்லை. அப்படி திருமணம் செய்துகொள்ளாமல் போனால் வாரிசு இல்லாமல் போய்விடும் என்ற கவலையும் எனக்கில்லை, நான் இயக்கும் படங்கள் தான் என்னுடைய வாரிசுகள்' என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment