விவாகரத்து வழக்குக்குப் பின், சோனியா அகர்வால் நடிக்கிறார்

நடிகை சோனியா அகர்வாலும் இயக்குநர் செல்வராகவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதன் மூலம் செல்வராகவனை விட்டுப் பிரிந்து வாழும் சோனியா அகர்வால், தான் மறுபடியும் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்குப் படத்தில் நடிக்கச் சோனியா அகர்வாலுக்கு வாய்ப்பு வந்துள்ளது. நடிகர் உபேந்திரா நடிக்கும் படத்தில் விதவை கேரக்டரில் நடிக்க அழைத்துள்ளார்களாம். இப்படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்பதால் சோனியா அகர்வால் சம்மதம் தெரிவித்துள்ளாராம்

No comments:

Post a Comment