திரையுலகில் பல ஆண்டுகளாகப் போராடி வெற்றி பெற்றவர், நடிகர் விக்ரம். தன்னால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தவர். ஆனால் சமீப காலமாக இவர் நடித்த படங்களின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாக, ஆண்டுகள் தேவைப்படுகின்றன. தற்போது விக்ரமின் நடிப்பில் வெளியான 'கந்தசாமி' படம் வெளியாவதற்கு ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆயின. இதனால் பல பட வாய்ப்புகளைக் கைவிட நேர்ந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த இரண்டு படங்களில் 'யாவரும் நலம்' படத்தை இயக்கிய விக்ரம் குமார் ஒரு படத்தையும். இயக்குநர் செல்வராகவன் ஒரு படத்தையும் இயக்கவுள்ளார்கள். இப்படங்களில் நடிப்பதற்கான தேதியையும் பிரித்துக் கொடுத்துவிட்டாராம்.
இதில் விக்ரம் குமார் இயக்கவுள்ள படத்திற்கு '24' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக, தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் இலியானவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். இதில் நடித்தபடியே செல்வராகவனின் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம். இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தில் கதாநாயகியாக 'சுப்ரமணியபுரம்' படத்தில் நடித்த சுவாதி நடிக்கிறார்.
No comments:
Post a Comment