மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி

1979 நவம்பர் 20 ஆம் தேதி, மத அடிப்படையில் மட்டுமன்றி அரசியல் அடிப்படையிலும் அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கான தினம். ஜுஹைமான் அல் ஒத்தைபி, முகம்மது அப்துல்லா எனும் இருவரால் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவால் மக்காவின் கா அபா பள்ளிவாசல் முற்றுகையிடப்பட்டது. சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு வெளி நாடுகளிலிருந்து முஸ்லீமல்லாதவர்கள் இஸ்லாத்தின் புனித பூமியான சவுதியில் வந்திறங்குவதால் களங்கப்பட்டுப்போன புனிதத்தலத்தை சவுதி அரசிடமிருந்து மீட்கவேண்டும் எனும் அடிப்படையில் வஹ்ஹாபிய குழுவால் ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பள்ளிக்கு உள்ளிருந்து திடீரென பள்ளி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது வெளியுலகிற்கு பரவாமல் இருக்க கடும் முயற்சிகளை அரசு எடுத்தபோதிலும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க அரசு (ஜிம்மி கார்ட்டர்) சவுதியின் பாதுகாப்புக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பிவைத்தது. ஒரு வார காலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போருக்கு எதிராக சவுதி ராணுவம் கவச வாகனங்களுடன் போராடியது. முற்றுகையை முறியடிக்க முடியாமல் நாட்கள் நீளவே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டது. அவர்கள் நவீன ஆயுதங்கள் குண்டுகளுடன், தாயிப் நகரில் சவுதி ராணுவத்திற்கு பயிற்சியளித்து, பின்னர் சுவர்களைத்துளையிட்டு நரம்புகளை செயலிழக்கச்செய்யும் குண்டுகளை வீசி ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தபோது முகம்மது அப்துல்லா போரில் இறந்து விட்டிருக்க ஜுஹைமானும் எஞ்சிய சிலரும் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.








முதலாம் உலகயுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அதிசம் நிகழ்ந்தது

1914ம் ஆண்டு முதலாவது உலகமகா யுத்தம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்த உலக யுத்தத்தில் 33 நாடுகள் கலந்துகொண்டாலும் பிரதான யுத்தம் முக்கியமாக பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலேயே நடைபெற்றது.
சுமார் 4 வருடங்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தின் பொழுது பிரித்தானியா ஒரு பெரிய சங்கடத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானியா சந்தித்த அந்த சங்கடமும், அந்தச் சங்கடத்தை சமாளிக்க ஒரு யூதன் செய்த உதவியும்தான், யூதர்கள் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளக் காரணமாக இருந்தது.
முதலாம் உலக யுத்தத்தின் ஆரம்பத்தில் மிகவும் வெற்றிகரமாக முன்னேறிய ஜேர்மணியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்தார்கள். குறிப்பாக ஐரோப்பாவின் கரையோரப் பிரதேசங்களை ஜேர்மனிப்படைகள் ஆக்கிரமிப்பதில் வெற்றி கண்டன.
இது பிரித்தானியாவிற்கு பெருத்த ஆயுதத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது.
எப்படியென்றால், அந்தக் காலத்தில் பீரங்கிகளை இயக்குவதற்குத் தேவையான அசிடோன் என்ற வெடிமருந்துக்கான மூலப்பொருட்களை ஐரோப்பாவில் காணப்படும் ஒருவகை மரங்களில் இருந்துதான் பிரித்தானியா பெற்றுவந்தது. ஜேர்மனியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்ததால், அசிடோன் வெடிமருந்தை தயாரிக்கமுடியாமல் பிரித்தானியா திண்டாடியது.
ஒரு சந்தர்பத்தில் பிரித்தானியா தனது பீரங்கிகளை இயக்குவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது. பீரங்கித்தாக்குதல்களைத்; தவிர்த்து யுத்தம் புரியும் நிலைக்கு பிரித்தானியப்படைகள் தள்ளப்பட்டன.
முதலாம் உலகயுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அதிசம் நிகழ்ந்தது.



முதலாம் உலகமகா யுத்தத்தில் பிரித்தானியா வெற்றிபெறக் காரணமாக இருந்த யூதரின் பெயர் கலாநிதி கெய்ம் வைஸ்மன் (Dr. Chaime Wizmann).
1874ம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்த இவர் ஜேர்மனி மற்றும் சுவிட்சலாந்தில் பல்கலைக்கழக படிப்பை முடித்துக்கொண்டு, இங்கிலாந்தில் உள்ள மன்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் இரசாயனவியல் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவருக்கு பிரித்தானியாவின் உயரதிகாரிகளோடு நல்ல தொடர்பிருந்தது. இவரை அணுகிய பிரித்தானிய உயரதிகாரிகள் அசிடோன் வெடி மருந்தை தயாரிக்க முடியுமா என்று வைஸ்மனைக் கேட்டார்கள்.
முடியும் என்று பதிலளித்த வைஸ்மன் தனக்கு ஒரு இரசாயன ஆய்வு கூடமும், தொழில்நுட்ப வசதிகளும், மூட்டை மூட்டையான சோளம் விதைகளும் தரும்படி நிபந்தனை விதித்தார்.
சோளம் விதைகளை மூலப்பொருளாகக்கொண்டு அசிடோன் என்ற வெடிமருந்தைத் தயாரித்து பிரித்தானியாவுக்குக் கொடுத்தார் வைஸ்மைன்.
அவர் தயாரித்துக் கொடுத்த வெடிமருந்துகளை பாவித்து பிரித்தானியப் படைகள் முதலாம் உலகயுத்தத்தை வெற்றிகொண்டன.
முதலாவது உலக யுத்தம் முடிவடைந்த உடனேயே பிரிட்டிஷ் அரசாங்கம் கலாநிதி வைஸ்மேன் அவர்களை அழைத்து தமக்கு அவர் செய்த பேருதவிக்கு பிரதியுபகாரம் செய்ய முன்வந்தது. ஆனால் வைஸ்மேன் தனக்கு வெகுமதிகள் அவசியமில்லை என்றும், உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டு, சீரழிந்து, நீண்டகாலமாக நிரந்தரத் தாயகம் இன்றித் தவிக்கும் யூதர்களுக்கு, யூதர்களின் பூர்வீகத் தாயகமான பலஸ்தீன நாட்டை (தற்போதைய இஸ்ரேல் தேசம்) பிரிட்டிஷ் அரசாங்கம் யூதர்களின் நிரந்தரக் குடியிருப்பாக வழங்கவேண்டும் என்பதே நான் விரும்பும் வெகுமதி என்று தெரிவித்தார்.
 (1517ம் ஆண்டுமுதல் 1917ம் ஆண்டுவரை சுமார் 400 வருடங்கள் துருக்கியின் ஒட்டோமான் பேரரசின் வசமிருந்த ஜெருசலேம் பகுதி, முதலாம் உலக யுத்தத்தின் பொழுது ஜெனரல் எட்முன்ட் அலன்பி (General Edmund Allenbyஎன்ற தளபதியின் தலைமையிலான பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.)
கலாநிதி வைஸ்மன் அவர்களின் விருப்பத்தைக் கவனத்தில் எடுத்த பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பல்பர் (Arthur James Balfour)வைஸ்மனை நோக்கி „உங்கள் ஜெருசலேம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். பிரித்தானியாவுக்கு பாரிய நன்மையைச் செய்த உங்களுக்காக பிரித்தானியா அதனை நிச்சயம் செய்யும்“ என்று கூறினார்.
யூதர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்த பிரித்தானியா, 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி, பலஸ்தீனாவில் யூத மக்களுக்கான தாயகம் அமைக்கப்படும் என்ற உறுதிப்பாட்டுடன் கூடிய பல்பர் பிரகடனத்தை (Balfour Declarationவெளியிட்டது.
இஸ்ரேலிய மக்களின் அகதிவாழ்கையை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, தாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களில் நல்ல நிலையில் இருந்த அனைத்து யூதர்களுமே தமது இனத்தின் நலனுக்காக ஏதோ ஒருவகையில் பங்களிப்புச் செய்திருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது. சில ஈழத் தமிழர்களைப் போல் அந்த இனக் குழுமத்தில் இருந்து அன்னியப்பட்டு வாழ்ந்த யூத முக்கியஸ்தர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.
இன்று எத்தனையோ ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அதி உயர் ஸ்தானங்களில் இருக்கின்றார்கள். அரசியலில் தீர்மானம் எடுக்கும் இடங்களில் கூட அமர்ந்திருக்கின்றார்கள். ஆனால் தமது திறமையின் பலன்கள் அவர்கள் சார்ந்த மக்களின் விடுதலைக்கு வித்தாகவேண்டும் என்று அவர்கள் சிந்திப்பதும் இல்லை, செயற்படுவதும் இல்லை.



பிரிட்டிஷ் மன்னராட்சி முறை முட்டாள்தனமானது: சல்மான் ருஷ்டி பேட்டி

லண்டன், செப்.26 (டிஎன்எஸ்) பிரிட்டிஷ் மன்னராட்சி முறையும் அதன் பாரம்பரியமும் முட்டாள்தனமானது என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (63) கூறியுள்ளார்.

லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பின்னர் ஏன் நீங்கள் "நைட்ஹுட்" பட்டத்தை ஏற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, "இலக்கியத்துக்காக பிரான்ஸ் நாட்டின் பட்டத்தை நான் ஏற்கெனவே பெற்றுள்ளேன். இந்நிலையில், எனது நாட்டின் பட்டத்தை மறுப்பது சரியாக இருக்காது என்பதால் 'நைட்ஹுட்' பட்டத்தை ஏற்றுக்கொண்டேன். இதற்கு எனது நன்றி." என்றார் ருஷ்டி.

இந்தியாவில் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி, பிரிட்டன் குடியுரிமை பெற்று லண்டனில் வசிக்கிறார். சென்னையைச் சேர்ந்த பத்மா லட்சுமி உட்பட 4 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். (டிஎன்எஸ்

ஈரான் அணு உலை மைய கம்ப்யூட்டர்களை தாக்கிய புதிய வைரஸ்

ஈரான், செப்.27 (டிஎன்எஸ்) ஈரான் புஷெர் அணு உலை மையத்தில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை புதிய வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வைரசுக்கு 'ஸ்டக்ஸ்நெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷெர் மையம் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பல்வேறு கம்ப்யூட்டர்களில் வைரஸ் கொன்ட புரோகிராமை நீக்குவதற்கு முயற்சி நடந்து வருகிறது. ஜெர்மனியை சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுனர்கள் இந்த வைரஸினை ஜுலை மாதம் கண்டுபிடித்தனர்.

அந்த வைரஸ் ஈரான், இந்தோனேஷியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை பெரிதும் தாக்கியுள்ளதாக தெரிகிறது. ஆகஸ்டு மாத நிலவரப்படி, ஈரானில் 60,000 கம்ப்யூட்டர்களும், இந்தோனேஷியாவில் ஏறத்தாழ 10,000 கம்ப்யூட்டர்களும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (டிஎன்எஸ்)
Sep 27, 2010

அமெரிக்கா தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்று - சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்,ஆக27:அமெரிக்காவிலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

அதில்,டேவிட் ஹெட்லி உள்ளிட்ட பல அமெரிக்கர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு வன்முறைக் காரியங்களுக்கு உதவியுள்ளனர் அல்லது நிகழ்த்தியுள்ளனர். இவர்களில் ஹெட்லி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராக இருக்கிறார்.

இன்னொரு அமெரிக்கரான பரூச் கோல்ட்ஸ்டீன் என்பவர் ஒரு யூத தீவிரவாதி ஆவார். இவர் 1994ம் ஆண்டு ஹெப்ரானில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாவார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், வெளிநாட்டுக்காரர்கள் கண்களில் தீவிரவாதத்தின் ஏற்றுதியாளராக அமெரிக்கா தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தன் வசம் சிக்கியுள்ள மேலும் 15,000 போர் ரகசிய அறிக்கைகளை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது கூறியுள்ளது.

சிஐஏ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
மற்றவர்கள் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்து தீவிரவாதம் பரவுவது சமீப காலமாக அல்ல. மாறாக இது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இதுவரை மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகள் மட்டுமே கருதப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவும் இதில் ஒன்றாக திகழ்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா வேட்டையாடி வரலாம்.

ஆனால் நிஜத்தில், தங்களது தீவிரவாத காரியங்களுக்கு அமெரிக்கர்களை பல அமைப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவை குற்றம் சாட்டி தயாரிக்கப்பட்டதல்ல, மாறாக மாறி வரும் சூழல்கள் குறித்த சிந்தனையை ஏற்படுத்தவே இதை தயாரித்தோம் என்று சிஐஏ கூறியுள்ளது.

இதுகுறித்து சிஐஏ செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், இவை ஒரு சாதாரண அறிக்கைதான். இப்படிப்பட்ட சூழல் உள்ளதை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலான விழிப்புணர்வு அறிக்கை மட்டு்மே என்றார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக 92,000 பக்கங்களைக் கொண்ட ராணுவ ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிககாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது நினைவிருக்கலாம்.

இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை கற்பழித்ததாக அன்னா ஆர்டின் என்ற பெண் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜூலியன், இதன் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை உள்ளதாக குற்றம் சாட்டியதும் நினைவுகூறத்தக்கது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் ஸ்வீடனில் வசித்து வருகிறார். அமெரிக்கா-சிஐஏவின் போர் ரகசியங்கள் குறித்து தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்

நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன. 


பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது





பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்.
புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான்.

இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம். அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது.

இதற்குள் சிங்களப் பேரினவாதம் தம் போர்க்குற்றங்களை உலகறியக் கூடாது என்பதற்காக, பிரபாகரன் எப்படி சாகடிக்கப்பட்டான் என்பதை மறைக்க தலைக்கு துணி போட்டனர். எப்படிப்பட்ட மரணம் என்பதை, குற்றத்தின் முழுத் தன்மையை எடுத்துக் காட்டும் வண்ணம் படத்தை  இணைத்துள்ளோம். எப்படி பிரபாகரன் கொல்லப்பட்டான் என்பதை, இது எடுத்துக் காட்டுகின்றது. அவர் மோதலில் சாகவில்லை என்பதையும், மூன்றாம் தரப்பிடம் சரணடைந்த பிரபாகரனை, மூன்றாம் தரப்பின் துணையுடன் எப்படி பேரினவாத பாசிட்டுகள் உயிருடன்  சிதைத்தனர் என்பதை இந்தப் படம் எடுத்துக்காட்டுகின்றது.


இங்கு இணைக்கப்பட்டுள்ள மற்றைய படங்கள், அரச பேரினவாதிகள் இறந்த உடலை அவமானப்படுத்தும் வக்கிரத்தை எடுத்துக் காட்டுகின்றது. முன்பு இறந்த ஒரு பெண் புலி உறுப்பினரின் உடலை இதே மாதிரித்தான், பேரினவாத சிங்கள ஆணாதிக்க நாய்கள் மேய்ந்தன. இதையும் நாம் முன்பு வெளியிட்டிருந்தோம். (கீழே அழுத்தி பார்க்கவும்)


இதே அவமானத்தைத்தான் பிரபாகரன் உடல் சந்திக்கின்றது. இறந்த உடலுக்கு கோமணம் கட்டி மகிழ்கின்ற பேரினவாத அதிகார வர்க்கம், தமிழனுக்கு கோமணம் கட்டிய வக்கிரத்துடன் அனைத்தும் நடந்தேறியுள்ளது. பிரபாகரன்  உடல் பலவிதமாக சிதைக்கப்படுகின்றது. முதலில் அரசு காட்டிய படம், அடித்து வீங்கிச் சிதைந்து போன முகம் தான்.

இறந்த பெண்ணின் உடலை மேய்ந்த அதே வக்கிரம் தான் இங்கும். பிரபாகரன் உடல் மேல் வன்முறைகள், எதிர்காலத்தில் காட்சிகளாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இங்கு குற்றங்கள் பல. பிரபாகரனின் வெறும் உடலுக்கு அப்பால், மூன்றாம் தரப்பிடம் நம்பி சரணடைந்த ஒருவனுக்கு நடந்த கதையிது. அவனை சித்திரவதை செய்து கொன்ற உண்மையை, இங்கு பளிச்சென்று இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. போர்க் குற்றத்தின் முழுப் பரிமாணத்துடன், அரங்கேறியுள்ளது.
வெளிநாட்டு புலித்தலைமை தன் குற்றத்தை மறைக்க வீரமரணம் என்று ஒருபுறம் சொல்லியும், இல்லை உயிருடன் உள்ளார் என்று ஏனையோர் சொல்லியும், தன் தலைவன் மேலான இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக உள்ளனர். பிரபாகரனை சரணடைய வைக்க தாம் மூன்றாம் தரப்பு ஊடாக நடத்திய காட்டிக் கொடுப்பை மூடிமறைக்க இந்தப் போர்க்குற்றமே இவர்களால் மூடிமறைக்கப்படுகின்றது.

இந்த உடல் பிரபாகரனுடையதல்ல என்றதன் மூலம், பேரினவாதம் செய்த இழிவையும் இந்த படுகொலையையும் கூட மறுக்கின்றனர். 

உண்மையில் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்து, அதன் மூலம் தாங்கள் காட்டிக்கொடுத்த இந்தச் சதியை மூடிமறைக்கின்றனர். இதன் மூலம் தமிழன் தலைவனாக தமிழ்மக்களால் கருதப்பட்ட ஒருவன் மேல் நிகழ்ந்த போர்க்குற்றத்தின் தன்மையையே, இவர்கள் இல்லாததாக்குகின்றனர். இப்படி பேரினவாத அரசுக்கு அவர்கள் மேலும் துணை போகின்றனர். அரசின் குற்றத்துக்கு பின்னால், அதற்கு உடந்தையாகி நிற்கின்றனர்.

பெரும்பான்மைத் தமிழ்மக்களை அவமானப்படுத்திய பேரினவாத அசிங்கத்தை வெளிப்படுத்தாது, தம் குற்றத்தை மூடிமறைக்க காட்டிக் கொடுக்கப்படுகின்றது. 

மறுபக்கத்தில் துரோகக் குழுக்கள், இந்த போர்க்குற்றத்தின் பின் இருந்துள்ளனர். பிரபாகரனை மோசடி மூலம் மூன்றாம் தரப்பிடம் சரணடையவைத்துக் கொன்றவர்கள் தான், படத்தை பெருமையுடன் வெளியிட்டார்கள். வேறு யாருமல்ல இந்தியாவில் றோவின் கூலிப்படையாக இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் இணையம் இந்தப் படத்தை  வெளியிட்டவுடனேயே, சிறிது நேரத்தில் அதை அகற்றியிருந்தனர். குற்றவாளிகள் தம் குற்றத்தை முழுமையாக மறைக்க எடுத்த எச்சரிக்கை நடவடிக்கை, இந்தப் படத்தை அவர்களை உடனேயும் அகற்ற வைத்துள்ளது. இப்படி இந்த போர்க் குற்றத்தில் இந்திய, இலங்கை கூலிக்குழுக்களும் இணைந்தே  பங்காற்றியுள்ளது. அரசுடன் இயங்கும் துரோகி கருணா முன்னிலையில், மூன்றுவிதமான உடல் சார் காட்சிகளை நாம் காணமுடியும்.

இப்படி போர்க்குற்றத்தின் முழுப் பரிமாணத்தில், அனைத்து பாசிட்டுகளும் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளின் துணையுடனேயே இந்தக் குற்றம் இன்று பாதுகாக்கப்படுகின்றது. இறந்த உடல் மேல் நடத்திய இழிவு, சரணடைந்த அவரைக் கொன்ற விதம், இந்த "ஜனநாயகத்துக்கு" ஏற்புடையதாக உள்ளது. இதுதான் அவர்கள் பேசும் ஜனநாயகம். இதுபோன்ற செயலை புலிகள் செய்தாலும் சரி, அரசு செய்;தாலும் சரி, அனைத்தும் மக்களுக்கு எதிரானவை தான்.

அந்தவகையில் நாம் மக்களுக்காக போராட வேண்டியுள்ளது. அனைத்து மக்கள் விரோதிகளையும், நாம் இனம் காணவேண்டிய காலமிது.

பிரபாகரனின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது கவனம் (மிகவும் உளப்பலத்தைப் பாதிக்கக் கூடியது)







 


பின் குறிப்பு: தகவல்களை உடனுக்குடன் தந்துதவும் சமூக அக்கறையாளர்களின் துணையுடன் தான், இதை நாம் மக்கள் முன் அம்பலப்படுத்த முடிகின்றது. போர்க் குற்றங்கள் தொடர்பான தகவல்கள், ஆவணங்களை எமக்கு தந்துதவுங்கள். இதை மக்களுக்கு முன்னால் எடுத்துச் செல்லவேண்டிய சொல்லவேண்டிய பணியில், எம்முடன் இணையுமாறு சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் தோழமையுடன் கோருகின்றோம்.






















கருணைக்கொலை தூக்கு தண்டனை விதிக்க சட்டம்- மத்திய அரசு ஆலோசனை

புதுதில்லி, ஜுலை.8 (டிஎன்எஸ்) ஜாதி  மாறி கலப்பு திருமணம் செய்யும் காதல் ஜோடிகளை, ஈவு இரக்கமின்றி கொலை செய்வது வட மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. தனி நபர் மட்டுமின்றி பஞ்சாயத்துக்களிலும் இத்தகைய கொலைக்கு உத்தரவிடும் கொடூரமும் நடந்து வருகிறது.
 
வட மாநிலங்களில் இத்தகைய கொலைகளை கருணைக்கொலை என்கிறார்கள். இதைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
 
தற்போதுள்ள சட்டப்படி கருணைக்கொலை செய்பவர்களுக்கு 5 ஆண்டு அல்லது ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம். எனவே கருணை கொலைகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
 
கருணைக்கொலை செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க, சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜுலை.8) நடந்தது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
 
அமைச்சர்கள் குழு ஒன்று கருணை கொலைகளை தடுக்க சட்டதிருத்தம் செய்வது தொடர்பாக முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி இன்று நிருபர்களிடம் கூறினார்.
 
இது தொடர்பாக மாநில அரசுகளிடமும் கருத்துக்கள் கேட்டு சட்ட திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாராளுமன்றச் கூட்டத்தொடரில் இந்த சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் பெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. (டிஎன்எஸ்

'பக்கா' ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்

  அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த் [^]தின் சுல்தானை முழு நீள ரஜினி [^] படமாக மாற்றியுள்ளனராம். இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.

செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம் [^] சுல்தான். இப்படத்தை முழு நீள அனிமேஷன் படமாக எடுத்து வந்தார் செளந்தர்யா.

ஆனால் படம் முடிவடைவதாக தெரியவில்லை. இடையில் பல சிரமங்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தை முழுமையான ரஜினி படமாக எடுக்கவுள்ளார் செளந்தர்யா. இன்னொரு விஷயம், படத்தை முழுமையாக ரஜினிகாந்த்தே டேக் ஓவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் இப்படம் முழுமையான ரஜினி படமாக மாறுகிறது. அதாவது அனிமேஷன் படமாக இது இருக்காது. மாறாக வழக்கமான, பிரமாண்டமான ரஜினி படமாக இது இருக்கும். படத்தின் இடை இடையே அனிமேஷன் காட்சிகள் வருவது போல மாற்றவுள்ளனராம்.

மேலும் படத்தின் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்தின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக சுல்தான் மாறவுள்ளது.

எந்திரன் தொடர்பான வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர் சுல்தானுக்கு முழு வீச்சில் நேரம் கொடுக்கவுள்ளாராம் ரஜினி.

மைக்கேல் ஜாக்சனுக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி

வாஷிங்டன், ஜுன்.25 (டிஎன்எஸ்) உலகப் புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (ஜுன்.25) அனுசரிக்கப்படுகிறது.




சென்ற ஆண்டு இதே நாளில்தான் மைக்கேல் ஜாக்சன் காலமானார். இந்நாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள பாப் இசை ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். மேலும் பல நகரங்களில் அவரின் நினைவை கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.



பல நகரங்களில் அவரை நினைவு கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். (டிஎன்எஸ்)

மீண்டும் பெக்காம்

ஜோகனஸ்பர்க், ஜுன்.30 (டிஎன்எஸ்) இங்கிலாந்து அணிக்காக பெக்காம் மீண்டும் களம் இறங்குகிறார்.வருகிற செப்டம்பரில் தொடங்க உள்ள ஐரோப்பிய கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் அவர் விளையாடுகிறார்.




இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணிக்காக விளையாடி வருகிறார். உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக, அவர் ஏ.சி.மிலான் அணிக்காக 6 மாத காலம் லோனில் விளையாடினார்.கடந்த சீசன் சீரி 'ஏ' போட்டியில் ஜெனோவா அணியுடன் ஏ.சி.மிலான் மோதியது. இந்த போட்டியின் போது,பெக்காமுக்கு கனுக்காலில் தசைநார் கிழிந்து 6 மாதகாலம் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடவில்லை. ஆனால் அணியின் துணை பயிற்சியாளராக அவர் தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தார்.



இதற்கிடையே அவரது காயம் விரைவாக குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 2012ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று ஆட்டங்களில் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவார் எனத் தெரிகிறது. ஐரோப்பிய கோப்பை தகுதி சுற்று போட்டியில் வருகிற செப்டம்பர் 3ந் தேதி பல்கேரியாவுடனும் 7ந் தேதி சுவிட்சர்லாந்து அணியுடனும் இங்கிலாந்து மோதுகிறது.மேலும் பெக்காம் மீண்டும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. (நன்றி tamilsportsnews.com)

மக்கள் கலாச்சாரத்துக்கு (சினிமா) வழிகாட்டும் ஒரு ஊடகமா? : மனித கலாச்சாரம்

இன்றைய பொதுப்புத்தி இப்படித்தான் கருதுகின்றது. மூலதனத்தின் மந்தைக் கூட்டமாக, மனிதன் இருக்கும் வரை, ரசனை மட்டகரமானதாக மாறிவிடுகின்றது. மனிதனை மூலதனத்தின் அடிமையாக இருக்க, மட்டகரமான ரசனை உற்பத்தி செய்யப்படுகின்றது.
இதனால் சினிமாவின் பின்னால், நாடகத்தின் பின்னால் மயங்கி, அதன் உறுப்புகளாகவும் மாடல்களாகவும் மாறி, வாழ்க்கையை அதற்கூடாக அணுகி வாழ முனைகின்றனர்.
இந்த சினிமா என்பது, சந்தைக் கலாச்சாரத்தின் விளம்பர ஊடகம் தான். சந்தைக்கு பாய்விரித்து தொழில் நடாத்தும் விபச்சாரத் தரகுத் தொழில் தான், இந்தக் கலை. பாலியல் விபச்சாரத்தை தொழிலாகவே நடத்தும் மாமாக்களின் அதே கலை நேர்த்தி, இந்த சினிமா என்ற கலைக்கும் உண்டு.
இந்த சினிமா பற்றிய விவாதம் மிகப்பெரியது. நாம் குறிப்பாக மட்டும் ஆராய்வோம். பிரதேசத்துக்கு பிரதேசம், சூழலுக்கு ஏற்பவும் சினிமா பற்றிய மதிப்பீடுகள் மாறுபடுகின்றது. மேற்கு சினிமா கீழைத்தேய நாடுகளின் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும், கருத்துரைக்கப்படுவதும் உண்டு. இதே போல் தான் கீழைத்தேய சினிமா பார்க்கப்படுகின்றது.
சினிமா உள்ளடக்கமும், அதன் ஆன்மாவும் எப்படி எந்த வழியில், கலைத்துவம் என்ற பெயரில் விபச்சாரமாகவே இருக்கின்றது என்பதை பார்த்தோம். கலை பற்றிய சமூகத்தின் விபச்சார நிலை தான், அதையே சமூக ரசனையாக்குகின்றது. மறுபக்கத்தில் சமூகத்தை வழிநடத்த முடியாத நிலைக்குள், சமூகம் தாழ்ந்து சீரழிந்துவிடுகின்றது. மேலிருந்து திணிக்கப்படும் உலகமயமாதல் நிகழ்ச்சிகளை, கீழ் இருந்து எதிர்கொள்ள முடியாது சமூகம் திணறுகின்றது.
சமூகம் தான் கொண்டிருந்த கடந்த கால அறிவுகள், நம்பிக்கைகள், வழிகாட்டல்கள் எதுவும் இதன் முன்னால் செயலற்றதாக்கப்படுகின்றது அல்லது இழிவாக்கப்படுகின்றது. சமூகம் மீதான தனது சுய நம்பிக்கையைக் கூட, சமூகம் தன்னளவில் இழந்து விடுகின்றது. தனது சொந்த வழிகாட்டல் மீதே நம்பிக்கையை இழக்கின்றது. மேலிருந்து இடியாக சமூகம் மீது இறங்கும் சமூகச் சிதைவை எதிர்கொள்ளும் ஆற்றல் என்பது, சமூகத்தின் கீழ் இருந்து அதை ஒருங்கிணைத்து எதிர்கொள்ள வேண்டும். மேலிருந்து சமூகத்துக்குள் வருவது வெளிப்படையானது. குவிந்த பணமும் அது வக்கரிக்கும் அதன் பண்பாடும் தான், அதாவது அதன் சொந்த வக்கிரம் தான் மேலிருந்து கீழ் வருகின்றது. கீழிருப்பதோ வறுமையும் மனித அவலமும், கையாலாகாத்தனமுமே.
இங்கு வெளிப்படுவது நேர்ரெதிரான இரண்டு கலாச்சாரங்கள். மேலே பணத் திமிர் கலாச்சாரமாகவும், கீழ் இருப்பது தாழ்வு மனப்பான்மையும், அடிமை மனப்பாங்கும், கையாலாகாத்தனமுமாகும். இதற்கு ஏற்ப மேலுள்ளதை உள்வாங்குவது அல்லது ஏதோ ஒரு வகையில் திருத்திப்படுத்தும் சுய கோட்பாட்டை கூறியபடி, மேல் இருந்து வரும் கலாச்சாரத்தில் சீரழிவதுமாகும். உண்மையில் சுய திருப்தி காணும் கோட்பாடுகளும், சமூகத்தின் மேல் நஞ்சிடுவதுமாகும்.
இதை எதிர்கொள்ளல் என்பது, இருக்கின்ற சமூகத்தின் இன்றைய பொது அறிவால் முடியாது என்பதே உண்மை. மாறாக சமூகத்தில் இருந்து சமூகத்தை துருவிக் கற்றல், அதை மீளக் கற்றுக் கொடுத்தல் என்ற கடந்தகால சமூக வாழ்வியல் வழியை கண்டறிதல் அவசியம். இதன் மூலம் கூட்டாக இயங்குதல் அவசியம்;. தொலைக்காட்சிகள், மற்றும் சினிமாவின் வருகைக்கு முந்தைய காலத்தில் கற்றல், கற்றுக்கொடுத்தல் என்ற அடிப்படையில் தான் சமூகங்கள் இயங்கின. ஆனால் இன்று பணம் உள்ளவன் மேலிருந்து திணிக்கும் தொலைக்காட்சியிடமும், சினிமாவிடமும் மனித விரோத சீரழிவை கற்றுக் கொடுத்தல் என்ற பணியை தாரை வார்ப்பதை, நாம் எப்படி அனுமதிக்க முடியும்? ஆனால் அதைத்தான் நாம் வெட்கமின்றி செய்கின்றோம். வழிகாட்டும் சமூகப் பாத்திரத்தை இழந்து, வெறும் நுகர்வு பண்பாட்டுக்குள் மனித உறவுகளை சிதைக்கின்றோம். சமூகம் கொண்டுள்ள மனித உறவுகள், பொருளைச் சார்ந்த ஒன்றாகவே மாறிவிட்டது. பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அன்பளிப்பு செய்வது, அதை நேசிப்பது என்று, அதைச் சுற்றியே மனித உறவுகளான ஒரு உலகம் இயங்குகின்றது. இப்படி இழிவான மலட்டு மனிதப் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் உருவாகிவிட்டன. இதைத்தான் சமூகத்தின் மனித செயல்பாடாக மாற்றிவிட்டு, ஒரு பொருளுலகத்தின் அடிமைகளாக நாம் வாழ்கின்றோம். பொருளை கொடுத்தல், வாங்குதலுக்குள் மனித உறவுகளை தீர்மானிக்கின்ற மனித அவலம். மனிதன் வெளிப்படுத்தும் உணர்ச்சி, ரசிப்பு, ஈர்ப்பு, சிரிப்பு, மகிழ்ச்சி, கோபம், அழுகை, உரையாடல், நடைமுறை முதல் காதல் வரை, பொருள் சார்ந்த நுகர்வின் எல்லைக்குள் மலினப்பட்டு, அதற்குள் சடங்குத் தன்மையிலான அசட்டுத்தனமாக உயிர்வாழ்கின்றது.
பொருள் சார்ந்த நுகர்வுக் கலாச்சாரத்தை, பண்பாட்டை மறுத்து வாழமுற்படுதல், அந்த நடைமுறையை பின்பற்ற மறுப்பதை எல்லாம், இழிவான செயலாக எண்ணுகின்ற, கற்பிக்கின்ற மனப்பாங்கு உருவாகியுள்ளது. குடும்பங்களில் இந்த உறவின் எல்லைக்குள், பிளவுகள் முரண்பாடுகள் கற்பிக்கப்படுகின்றது. இப்படி பொருள் சார்ந்த உலகை நடைமுறையில் பின்பற்ற மறுப்பதை விநோதமாக நோக்குகின்ற அற்பத்தனங்கள், சமூக அரங்கில் பல்லிளித்து மிரட்டுகின்றது. இந்த பொருள் சார்ந்த உலகம் உருவாக்குவதோ, கவர்ச்சியும் ஆபாசமும் தான்.
மனித உறவுகளைச் சுற்றி இந்த நுகர்வு நிகழ்ச்சி நிரலை இனம் காண்பது என்பது கடினமானது. சமூக உண்மைகளையும் விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாக கற்பதும், நடைமுறை வாழ்விலான போராட்டத்தில் அதை தெரிந்து கொள்வதன் மூலமுமே இதை எதிர்கொள்ள முடியும். பகட்டான, ஆடம்பரமான, வீம்பான, எடுப்பான திமிர்தனங்களால், எதார்த்த உண்மையை புரிந்து கொள்ளவே முடியாது. சமூகத்தின் பொதுப் புத்தி மட்டம் இதற்குள் தான், தன்னை விளம்பரப்படுத்தும் அற்பத்தனத்தில் உளறுகின்ற துயரம் நிகழ்கின்றது.
பொதுப்புத்தி மட்டம் நாணம் கட்டிய மாடுகள் போன்று பழக்கப்படுத்தப்படுகின்றது. புதிய தலைமுறைகளை கருவிலேயே இருந்து, இதற்குள் உற்பத்தி செய்கின்றனர். கருவிலேயே புகுத்தப்படுகின்ற நுகர்ச்சிவெறி சார்ந்த கவர்ச்சியும் ஆபாசமும் திமிராகவே வெளிப்படுகின்றது. இப்படி வெளிப்படுத்தும் இந்த நுகர்வுவெறி சார்ந்த திமிருக்கு முன்னால், உழைக்கும் சமூகம் கூனிக்குறுகி விடுகின்றது. பணக்காரனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் உழைக்கும் வர்க்கம் போல், நுகர்வுவெறிக்கு முன்னால் உழைக்கும் மக்கள் கூனிக்குறுகுகின்றனர். இதுவே சொந்த குடும்பங்களில், பழைய புதிய தலைமுறைக்குள்ளும் நடக்கின்றது. உலகமயமாதலின் அற்பத்தனத்தை முன்னெடுக்கும் தர்க்கம் மற்றும் நடைமுறை வாதத்தின் முன்னால், அதை மறுக்கும் உழைக்கும் வர்க்கம் கைகட்டி நிற்கின்ற மனித அவலம். இதற்குள் சீரழிந்து விடுவதும், சினிமாவூடாக தொலைக்காட்சி ஊடாக அதை கற்பனையில் நுகர்ந்து வாழ முனைவதும், இதை நியாயப்படுத்துகின்ற எல்லைக்குள் அங்கீகரித்து விடுவதும் நிகழ்கின்றது. தமக்கு தாமே, தமது மனத்திரையில் இந்த மாயையை உற்பத்தி செய்கின்றனர்.
இதன் எதிர்நிலை தம்மைத்தாமே திருப்தி செய்கின்ற கோட்பாட்டையும், இதே உலகமயமாதலில் கண்டுபிடிக்கின்றது. சினிமாவை கலாச்சாரத்தின் ஊடகமாகவும், மொழியின் ஊடகமாகவும் காணவும், சிந்திக்கவும் தொடங்கி, அதுவாக அது இருப்பதாக, நம்பவும் காட்டவும் தொடங்குகின்றது. சொந்த சமூகத்தில் இருந்து அன்னியமாகின்ற போது ஏற்படும் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளின் அதிர்வு, அதை சினிமா ஊடான கலாச்சாரமாக மொழியாக காண்கின்ற அவலமும், அதை விளக்குகின்ற தர்க்கவாதமும் உருவாகின்றது.
சமூகத்தின் போலியான மனப்பாங்கு சார்ந்த, பிரமை சார்ந்த சமூக அறியாமையே, இதன் மூலதனமாகின்றது. ஆங்கிலப் படம் பார்த்தால் ஆங்கிலம் படிக்க முடியும் என்ற சமூக மனப்பிரமையும் அதை நோக்கிய அறியாமையும் தான், தமிழ் படத்தைப் பார்த்தால் தமிழைக் கற்க முடியும் என்று நம்புகின்றது. இதுபோல் தான் கலாச்சாரத்தையும் பற்றிய, மனப்பிரமையும் உருவாகின்றது. சமூகம் என்ற தொப்புள்கொடியில் இருந்து சமூக உறுப்புகள் அன்னியமாகின்ற போது, முரண்பட்ட இரண்டு கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று இப்படி மோதுகின்றது.
இந்தத் தளத்தில் பலமான இழிவான நுகர்வுக்கலாச்சாரம் ஆதிக்கம் வகிக்கின்ற நிலையில், பலமற்ற கலாச்சாரம் அதை எதிர்கொள்ளும் ஆற்றலை இழக்கும் போது, சாக்கடைக்குள் வடிகாலை கண்டுபிடிப்பதில் தான், அது தன்னைத்தானே திருப்தி செய்து கொள்கின்றது. இந்த சாக்கடையான சினிமாக் கலாச்சாரத்தையும், அது பேசும் மொழியைப் பற்றியும் சுய திருப்தி கொள்கின்றது. உண்மையில் இந்த விடையத்தைப் சமூக முழுமையில் புரிந்து கொள்ளாமல், அதற்குள் தாம் ஒரு தீர்வைக் கண்டுள்ளதாக மனப்பிரமை கொள்கின்றனது.
இது பலதளத்தில் பலவிதமாக இருந்த போதும், மேற்கத்தைய கலாச்சாரத்தை இழிவானதாக குறுக்கிப் பார்க்கின்ற, இந்தியக் கலாச்சார சுயதிருப்தி வெளிப்படுகின்றது. இந்தப் பொதுப்புத்தியில் இந்தியக் கலாச்சாரத்தை அணுகுகின்றது. இந்தியக் கலாச்சாரம் உயர்ந்ததாகவும், மேற்கத்தைய கலாச்சாரம் தாழ்ந்ததாகவும் கற்பிக்கின்ற பொதுப்புத்தி மட்டம், தனது அறிவு சூனியத்துக்கு ஏற்ப அதற்கு விளக்கம் கொடுத்து அதை அணுகுகின்றது. குறிப்பாக பெண்களின் ஓழுக்கவியல், நடையுடை பாவனைகள், முதல் அவளின் திருமணங்கள் அனைத்தையும் இதற்குள் ஓப்பிட்டு காண்பதே, இந்த இந்தியக் கலாச்சாரத்தின் ஆபாசமான பொது எல்லையாகும். இது மறுக்கப்படும் போது, இவை அத்துமீறப்படும் போது, நிலப்பிரபுத்துவ சமூக உறவு சார்ந்து பெண்ணின் எதிர்கால பாலியல் பற்றிய அச்சம் ஏற்படும் போது எல்லாம், சினிமா கலாச்சாரம் பற்றியும், அது பேசும் மொழி பற்றிய பிரமைகள், எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்படுகின்றது.
மேற்கத்தைய கலாச்சாரம், கீழைத்தேய கலாச்சாரம் என்ற பிளவுக்கு இடையிலான பொது அடிப்படை என்பது, பொருளாதார உள்ளடகத்தில் இருந்தும் சீரழிந்துவிட்டது. முன்பு முதலாளித்துவக் கலாச்சாரம், நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் என்ற ஒரு பொதுக்கோடு பிரித்த போதும், அவை படிப்படியாக ஒன்றுக்குள் ஓன்றாகவே சீரழிந்தது. நிலப்பிரபுத்துவமும் ஏகாதிபத்தியமும் கொண்டிருந்த இணக்கமானதும், ஒன்றையொன்று சார்ந்த தமக்குள் புனிதமான விபச்சாரத்தை செய்து கொண்டது. இந்த ஏகாதிபத்திய கலாச்சாரம் இன்று, முழுமையான உலகமயமாதல் என்று நுகர்வுக் கலாச்சாரமாகிவிட்டது. இது வாழ்வியல் கூறுகளில் ஏற்படுத்தும் பாரிய தாக்கத்தை, அதன் விளைவையும் சமூகத்தால் உட்கிரகிக்க முடிவதில்லை. அதனால் அது அதனிடத்தில் தன்னை அறியாமல் விலகிய முரண்பாட்டுடன் அம்மணமாகவே சரணடைகின்றது.
1. உலகமயமாதல் ஏற்படுத்தும் சமூக விலகல். தனிமனித வாதம், நுகர்வுவாதத்தின் மையப்புள்ளியாக ஒன்றிணைந்து, சுய அனுபவிப்பு பற்றிய பிரமையில் சமுகத்தை எதிராக நிறுத்துகின்றது. இது கலாச்சாரம் பற்றிய எதிர்நிலை முரண்பாடுகளை உருவாக்குகின்றது.
2. சமூக அமைப்பில் நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்தும் சீரழிவு. உலகமயமாதலில் நுகரக் கூடியவனுக்கும், நுகர முடியாதவனுக்கும் இடையிலான இரட்டைக் கலாச்சாரம். இதற்கு இடையில் அங்குமிங்குமாக ஓடிப்பிடிக்கும் வக்கிரம். இது தனிமையில் வக்கிரமடையும் போது, வன்முறை கொண்ட அராஜக கலாச்சாரத்தை கொண்டு, சமூக விரோத கலாச்சாரத்தை கட்டமைக்கின்றது.
3. உலகமயமாதலால் ஏற்படும் சமூக கொந்தளிப்புகளால் ஏற்படும் பாரிய புலம்பெயர்வுகள், கலாச்சார ஏற்றுமதிகளும், கலாச்சாரத்தில் ஒரு சமூக அதிர்வை உருவாக்குகின்றது. குறிப்பாக இரட்டைக் கலாச்சாரம், இரட்டை மொழி சூழல், இதனால் பெற்றோருக்கும் குழந்தைக்குமான கலாச்சார இடைவெளிகள் பாரிய அளவில் அதிகரிக்கின்றது.
உலகமயமாதல் கலாச்சாரத்தில் முழுமையாக வாழத் தொடங்கும் புதிய தலைமுறைக்கும், அதற்கு முந்தைய தலைமுறைக்கும் இடையில் அடிப்படையான முரண்பாடாக இருப்பது, சமூகத்தன்மையை மறுத்தலாகும். உலகமயமாதலுக்குள் பிறந்த புதிய தலைமுறை, மனிதன் என்ற சமூக கலாச்சாரமற்ற தனிமனித நுகர்வு கலாச்சார நிலையில் வாழத் தூண்டுகின்றது. முந்தைய தலைமுறை மனித கலாச்சாரத்தில் சேர்ந்து வாழ்தல் என்ற முரண்பாடு, சரியாக உணரப்படாத ஒன்றாக உள்ளது.
புலம்பெயர்வு முதல் உலகமயமாதல் தரிப்பிடங்கள் எங்கும், இந்தக் கலாச்சார முரண்பாடுகள் விசுவரூபம் எடுக்கின்றது. இடையில் நிற்கும் மத்தியதர வர்க்கத்திடையேயான பாரிய ஒரு சமூக நெருக்கடியை இது உருவாக்குகின்றது. இளம் பருவ சமூக உறுப்புகள் மீதான சமூகக் கட்டுப்பாட்டை இழக்கின்ற ஒரு முரண்பாடாக மாறுகின்றது. இதுவே தலைமுறைக்கு இடையிலான முரண்பாடாகவும் உருவாகின்றது. அவசரம் அவசரமாக தமக்குத் தெரிந்த குறுக்கு வழியை நாடுகின்றனர். இதன் ஒரு அங்கமாக சினிமா ஊடாக கலாச்சாரம், சினிமா ஊடாக மொழி என்று, குறுக்குவழியில் சமூக உறவுக்கு பாலம் அமைக்க முனைகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால், குழந்தைகளைப் பராமரிக்க தொலைக்காட்சியை பயன்படுத்தும் அதே தவறான உத்திதான். இங்கும் பருவவயதுக்கும் உரிய பெற்றோரின் பிரச்சனைகளுக்கு, சினிமாவை தீர்வாக காண்பது சமூக அறியாமையாகும்.
இதையும் மத்தியதர பெற்றோர்கள் என்ற சமூகம் கண்டுபிடித்து வழிகாட்டவில்லை. மாறாக உலகமயமாதல் சந்தை இளைய தலைமுறையை அதற்குள் உள்ளிழுக்க, பெற்றோர் அதற்கு கொள்கை ரீதியில் சுயவிளக்கம் வழங்கி ஊக்குவிக்கின்றனர். பெற்றோர் இதற்கு கலாச்சாரம் மொழி என்று சுய விளக்கம் வழங்க, குழந்தை விரும்பும் ஆபாசத்தில் கவர்ச்சியிலும் அதற்குள் மூழ்கி விடுகின்றனர். இந்த ஒருமைப்பாடு மூலம் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றிணைந்த சமூகமாக இருப்பதாக நம்புகின்றனர். உலகமயமாதல் என்ற நுகர்ச்சிக் கலாச்சாரத்தில், பெற்றோர் சுயமாக குழந்தைகளுக்கு (சமூகத்துக்கு) வழிகாட்டியாக இருக்க முடிவதில்லை என்பதே உண்மை. சுயமாக சிந்திக்கும் பெற்றோர் முன் உள்ள கேள்வி மிக சிக்கலானதே.
1. பருவமடைந்த ஆண்கள் பெண்கள் (சிறுவயதில் அக்கறைப்படாத) சினிமாவை ஏன் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்?
2. சினிமா பார்ப்பதை தமிழ்க் கலாச்சாரம் என்ற எல்லைக்குள் பெற்றோர் பார்க்க முனையும் போக்கும், பிள்ளையின் கண்ணோட்டத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் என்ன?
சினிமா விரும்பிப் பார்ப்பதை, குழந்தையின் சீரழிவாகப் பெற்றோரால் பார்க்கப்படுவதில்லை. மாறாக நல்ல அம்சமாக பெற்றோரால் பார்க்கப்படுகின்றது. இந்த வகையில், இது ஏதோ ஒருவகையில் ஊக்குவிக்கப்படுகின்றது.
பொத்தாம் பொதுவிலும், இயல்பான சமூக ஓட்டத்திலும், எதையும் சுயவிமர்சனம் விமர்சனத்துக்குள்ளாக்காத எமது சமூக மனப்பான்மையின் மொத்த விளைவு இது. வெறும் மந்தைகளாக, மந்தை மனப்பாங்கில் வாழமுனையும் அடிமை மனப்பாங்காகும். இதை பாதுகாக்க முனையும் குட்டிபூர்சுவா மனப்பாங்கு. குழந்தைக்கு பின்னால் ஓடி, வால் பிடித்துச் செல்லும் சமூக அறியாமையாகின்றது. குழந்தைக்கு வழிகாட்டிச் செல்லவேண்டிய பெற்றோர்கள், அதை செய்ய முடியாது சிதைகின்றனர். உலகமயமாதல் விதைக்கும் நஞ்சுகளை நுகர்வுச்சந்தையில் இருந்து வேகமாக உள்வாங்கும் குழந்தையும், இந்த குழந்தைக்கு பின்னால் ஒடுகின்ற பெற்றோரின் பரிதாபகரமான நிலைமையையும் உலகமயமாதல் உருவாக்குகின்றது. உண்மையில் பெற்றோரின் பின்தங்கிய அறிவுசார் வளர்ச்சியின்மையை, உலகமயமாதல உருவாக்குகின்றது. சமூகம் சார்ந்த கூட்டுச்செயல் சார்ந்த இயலாமையும், குழந்தையின் நிலைக்கு தத்துவவிளக்கம் காண முயலுகின்ற சுயபெருமை வாதங்களில் மூழ்குகின்றது. இந்த வகையில் கலாச்சார சினிமா பற்றிய பெருமை, சினிமா மொழி பற்றிய பிரமையில், குழந்தையின் நடத்தையை, அதற்கூடாகவே தம்மை குழந்தையுடன் இணைக்க முனைகின்றனர். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான இணைப்பை, சினிமாவாக கருதுகின்ற எளிமையான இலகுவான எடுகோளாகின்றது.
இந்த தமிழ் சினிமா எதை, எப்படி, எந்த வழியில் சொல்ல முனைகின்றது. இதன் மொழி என்ன? இதன் கலாச்சாரம் என்ன? தமிழ் சினிமா மேற்கு சினிமாவில் இருந்து எப்படி மாறுபடுகின்றது? இப்படி பல கேள்விகளை சுய அறிவுள்ள எவரும் சுயமாக எழுப்ப முடியும். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டத்தில் அப்படி எழுப்பப்படுவது கூட கிடையாது. மாறாக இதன் பின் வால்பிடித்து ஒடும் குறுகிய ஓட்டமும், இதற்கு சுயவிளக்கம் கண்டுபிடிக்கும் பொது அறிவுமாக, அரைத்த மாவையே அரைக்கின்ற செக்குமாடுகள் நிலையில் மனித குலம் அடிமைப்படுத்தப்படுகின்றது.
தமிழ் சினிமா தமிழ் கலாச்சாரத்தின் ஊடகமா? தமிழ் மொழியின் ஊடகமா? அப்படி நம்புவது, நம்ப வைப்பது அபத்தமாகும். தமிழ் சினிமாவின் பின்னால் உள்ள கட்டமைப்புகள் என்ன? அதன் சாரமே தனிமனித நுகர்வுவெறியும், தனிமனித வன்முறையும், பாலியல் நுகர்ச்சி வக்கிரமும் தான். இவை அனைத்தும், இயற்கையின் பாலியல் சார்ந்த தூண்டுதல் உருவாக்கும் காதலை, கவர்ச்சி கொண்டு ஆபாசமாக்கி புகுத்தப்படுகின்றது. இந்த சினிமாக் கலை, பாலியல் கவர்ச்சியை ஆபாசத்தை தனிமனித நுகர்வாகத் தூண்டும் ஒரு ஊடகவியல். இதுதான் தமிழ் சினிமாவின் ஆன்மா. இதுவின்றி அது உயிர் வாழமுடியாத ஆபாசத்தில் மூழ்கி மிதக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் உள்ளும் இருக்கின்ற பாலியல் உணர்வைத் தூண்டி, அதை தரம்கெட்ட வகையில் வக்கிரப்படுத்தி வியாபாரம் செய்யும் ஊடகம் தான் சினிமா என்ற வியாபாரக் கலை. அதன் கலாச்சாரம், மொழி என அனைத்தும் இந்த வியாபாரம் என்ற ஆபாசத்துக்கு உட்பட்டதே.
கிட்லர் மக்களின் போராட்டம் மற்றும் மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்துவது பற்றிக் கூறிய போது 'மக்களா? அவர்களுக்கு தேவை ஒரு ரொட்டித் துண்டும், சர்க்கஸ்சும் மட்டுமே" என்றான். இதற்கு மேல் யாரையும் சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஆள்பவர்களும், அடக்குமுறையை மக்கள் மேல் ஏவுபவர்களும், விதிவிலக்கின்றி இந்த அடிப்படையில் தான் மக்களை மந்தைகளாக வைத்திருகின்றனர். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டம் இதற்குள் தான் இயங்குகின்றது. தமிழ் சினிமா இதற்கு விதிவிலக்கா? இல்லை. மக்களின் உணர்வுகளை அற்ப இழி உணர்வுகளாக மாற்றுவது, இதன் சாரம். இங்கு எழுவது இழிவான அற்பமான பாலியல் ஆபாச உணர்வு என்பதை, சமூகம் காண மறுக்கின்ற அறியாமை என்னும் அவலமும், இதன் கழிசடைத்தனமுமே சினிமாக் கலையாகின்றது.

பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து

அடிமைகளின் வரலாறு தான், இந்தியாவின் வரலாறு. யாரும் இப்படி இதை அணுகியது கிடையாது. சாதியம் என்பது, நிலவும் அடிமைகளின் மொத்த வரலாறு தான். இந்த அடிமைத்தனம், சாதியப் படிநிலையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
'..ஒரு சமூகத்தில் எந்த ஒரு தனிமனிதனும் எப்போதும் எதாவது ஒரு வர்க்க உறுப்பினராகவே இருக்கின்றான். இது ஒரு உலகளாவிய உண்மை. தொன்மையான இந்துச் சமூகமும் இவ்வுண்மைக்கு உட்படாத விதிவிலக்காக இருந்ததில்லை என்பது நாமறிந்த ஒரு உண்மையே." இதை கார்ல் மார்க்ஸ் சொல்லவில்லை. இது 24 வயதே நிரம்பியிருந்த இளம் அம்பேத்கரின் கூற்று. சோவியத் புரட்சி 1917 இல் உலகைக் குலுக்க முன்னம், 1916 இல் அம்பேத்கர் இந்திய சாதிய அமைப்பைப் பற்றிய தனது ஆய்வில் இதை முன்வைத்திருந்தார்.

இளம் அம்பேத்கரின் இந்தக் கூற்று ஊடாக இந்தத் தொடரில் அழைத்துச் செல்லுகின்றேன். இதுவரை சாதியம் குறித்து நிலவும் ஆய்வுகளையும், முடிவுகளையும், இந்த நூல் மூலம் நான் மறுதலிக்கின்றேன். 'சாதி என்பது அடைபட்டுள்ள ஒரு வர்க்கமே" என்று இளம் அம்பேக்கர் கூறியதன் அடிப்படையில், இதை மறுதலிக்கின்றேன்.

சாதியம் பற்றி ஆய்வுகள் பொதுவாக பார்ப்பனியத்தின் செல்வாக்குக்கு உட்பட்டதும், தனிச்சொத்துரிமை சமூக அமைப்பின் நியாயப்பாட்டுக்கும் உட்பட்ட முடிவுகளே, சாதியம் பற்றிய பகுப்பாய்வாக உள்ளது. பொதுவில் சாதிய சமூக பொருளாதார அடிப்படைகளுக்கு உட்பட்டு, அதை நியாயப்படுத்தி விடுகின்றது. இவற்றில் பல முன்கூட்டிய முடிவுகளின் அடிப்படையில், கற்பிக்கப்பட்டு அவை மறுபடியும் திணிக்கப்பட்டுள்ளது. வரலாற்று இயங்கியலின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் மாற்றங்களையும், அதற்கான சமூகப் பொருளாதார காரணங்களையும் ஆய்வு செய்ய மறுப்பதே, சாதியம் பற்றிய வரலாறாக எம்முன்னுள்ளது.

வருணம் என்பது சுரண்டும் வர்க்க அமைப்பாக, அதற்குள் தனிச் சலுகையின்றி அது இயங்கியது. இந்த இயங்கியல் போக்கை மறுத்த பார்ப்பனர், சுரண்டும் உரிமையை பரம்பரை உரிமையாக்கியதால் தான், வருணம் சாதியாக திரிந்தது. இங்கு தனிச்சொத்துரிமையிலான இயங்கியல் போக்கின் மீது, இயங்கியல் மறுப்பை கருத்துமுதல்வாதம் கொண்டு பார்ப்பனர்கள் மறுத்தனர்.

இதனால் வ(ருண)ர்க்க சமூகமோ சாதிய சமூகமாகத் திரிந்து பார்ப்பனியமாகியது. வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனிய எதிர்ப்பிலும் இயங்கியல் மறுப்பு கருத்துமுதல்வாத உள்ளடக்கத்தில் இயங்குவதுதான். தற்செயலாக சாதியில் பிறப்பவன் (உயர்சாதியில்), சாதிக்கு எதிராக சாதியை விட்டு விலகவும், அதற்கு எதிராக போராடவும் முடியாது என்கின்றது இந்த இயங்கியல் மறுப்பு. இதை அவர்கள் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலாக கொள்கின்றனர்.

இது சாதியை ஒழிக்க முடியாது, சாதிக்கு எதிராகப் போராட முடியாது என்ற இயங்கியல் மறுப்பை கருத்துமுதல்வாத உள்ளடகத்தில் வைக்கின்றனர். இதனால் வெறுமையாகி விடுகின்றது. உயர்சாதிக்கு எதிரான சாதிகளின் வன்முறையாக மாறுகின்றது. சாதியை விட்டு விலகவும், அதை ஒழிக்கவும் முடியாது என்ற இயங்கியல் மறுப்பை, சமூகப் பொருளாதார அரசியலாகத் திணிக்கின்றனர். இடையில் வந்த சாதி கொண்டிருக்கும் இயங்கியல் மறுப்பை, சமூக இயங்கியல் மூலம் ஒழித்துக்கட்ட முடியும். ஆனால் இயங்கியல் மறுப்பால் அது முடியாது.

சாதி பற்றிய ஆய்வு முறைகள், அதில் உள்ள கோளாறுகள், இதில் உள்ள திரிபுகள், இந்த விடையத்தை சிதிலமாக்கியுள்ளது. இந்தியாவின் சாதியம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட இளம் அம்பேத்கர், சாதியத்தின் வேரைக் கண்டறிவதில் மிக நெருங்கிச் சென்றவர். ஆனால் பின்னால் அதில் இருந்து விலகிச் சென்றுவிடு;கின்றார். இளம் அம்பேத்கராக 09.05.1916 அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், சாதிய சமூக அமைப்பை நெருங்கிச் சரியாக பார்ப்பதில் ஒரு முன்னோடியாக இருந்திருக்கின்றார்.

ஆனால் தன் பிந்தைய ஆய்வு மற்றும் அரசியல் முடிவுகளில், இதைக் கையாள முற்படவேயில்லை. அவர் தனது பூர்சுவா வாழ்வியலுக்கு ஏற்பவும், பிரிட்டிஷ்சாருடன் அவர் கொண்டு இருந்த சமரச அரசியலுக்கு ஏற்பவும், அவர் தனது முன்னைய மிகச் சரியான எடுகோளைக் கைவிட்டு விடுகின்றார். அம்பேத்கரை முன்னிறுத்தும் பலரும், இந்த இளம் அம்பேத்கரின் முடிவைக் கண்டு கொள்வது கிடையாது. இதை பொதுவாக மூடிமறைத்தே, சாதிகளை அணுகினர், அணுகுகின்றனர். 

இளம் அம்பேத்கராக 1916ம் ஆண்டு அவர் ஆற்றிய உரையில் '.. எந்த வர்க்கம் முதலில் சாதி ஆக்கப்பட்டது என்பதை தீர்மானிப்பதே போதுமானது. சொல்லப்போனால் வர்க்கமும் சாதியமும் அடுத்தடுத்துள்ள அண்டை வீட்டுக்காரர்கள். அவற்றைப் பிரித்து நிற்பது மிகச்சிறிய இடைவெளி. சாதி என்பது அடைபட்டுள்ள ஒரு வர்க்கமே." என்றார். இளம் அம்பேத்கர் அன்று ஆற்றிய உரையில், இந்த விடயத்தை மிகவும் நுட்பமாகவும் தெளிவாகவும் நெருங்கிப் பார்க்கின்றார். வர்க்கம் ஊடாக சமூகத்தை அணுகாத, வர்க்கம் பற்றிய அறிவு இந்திய சமூகத்தில் இல்லாத காலத்தில், அம்பேத்கர் இதில் ஒரு முன்னோடியாக நெருங்கி இருந்தார். வர்க்கம் ஊடாக இந்திய சாதிய சமூகத்தைப் பார்க்க முனைந்தார். வர்க்கத்தைக் கடந்து, சாதியைப் பார்க்க முடியாது என்றார்.

அவர் அந்த உரையின் தொடர்ச்சியில் 'ஆக சாதியின் தோற்றுவாய் பற்றிய நமது ஆய்வு என்பது இந்த வேலியை தனக்குத்தானே எழுப்பிக்கொண்ட வர்க்கம் எது என்னும் வினாவுக்கு விடையளிப்பதாக இருத்தல் வேண்டும்" என்றார். இப்படி மிகச் சரியாகத் தான், இளம் அம்பேத்கர் சாதியுடன் போராடத் தொடங்கினார். வர்க்கத்தை வேலியிட்ட போதுதான், சாதியம் உருவாகியது. ஆனால் இதை அவர் தெளிவுபடுத்தவில்லை என்ற போதும், மிக நுட்பமாகவே அதை வெளிப்படுத்துகின்றார்.

சாதியம் பற்றிய தனது பிந்தைய ஆய்வுகளில், அம்பேத்கர் உட்பட யாரும் தொடாத ஒரு மையமான விடையம் இது. மேலும் அவர் தனது உரையில் '..இக் கேள்விக்கு விடை இந்தியா எங்கிலும் சாதிகள் எப்படி வளர்ந்தன, விரிந்து பரந்தன என்னும் புதிரை தௌ;ளத்தெளிவாக்க நமக்குத் துணை நிற்கும். கெடுவாய்ப்பாக இக்கேள்விக்கான பதிலொன்றும் என் சக்திக்கு உட்பட்டதாக இல்லை." என்கின்றார் இளம் அம்பேத்கர்.

இதற்கு பிந்தைய வரலாற்றிலும், சாதிய ஆய்வுகளிலும், யார் இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்? இதற்கு வெளியில் தான் அம்பேத்கர் உட்பட, பலரும் பயணித்துள்ளனர். இப்படி சாதியத்தின் தோற்றத்தை திரித்துப் புரட்டியதே, சாதிய பற்றிய புரிதலாகவும், சாதியம் பற்றிய  தத்துவங்களாகவும்;; உள்ளது.

கேள்வியைக் கேட்ட அம்பேத்கர், அதே உரையில் 'இக் கேள்விக்கு நான் சுற்றி வளைத்தே விடையளிக்க முடியும்." என்கின்றார். அவர் தனது வாழ்நாள் முழுக்கவே, இப்படி சுற்றி வளைத்து விடுகின்றார். அவர் மட்டுமல்ல, சாதியம் பற்றிய ஆய்வுகள் அனைத்தும், இதைத் தான் செய்துள்ளது, செய்துவருகின்றது.

சுற்றிவளைக்க வெளிக்கிட்ட அம்பேத்கர், அதே உரையில் 'பிராமண வர்க்கம் ஏன் தன்னைத் தானே ஒரு சாதியாக வேலியிட்டுக் கொண்டது என்பது முற்றிலும் வேறான கேள்வி." என்று கூறி, அந்த விடையத்தை சுற்றி வளைத்ததுடன் அதை விலகி விட்டு விலகிச் செல்லுகின்றார். 'பிராமண வர்க்கம் ஏன் தன்னைத் தானே ஒரு சாதியாக வேலியிட்டுக் கொண்டது"? இதற்கு அம்பேத்கர் உட்பட, பலரும் ஏன் பதிலளிக்க முனையவில்லை.

பிராமண வர்க்கம் ஒரு சுரண்டும் வர்க்கம் என்பதால் தான், அது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேலியிட்டுக் கொண்டது. இதை அம்பேத்கர் சொல்ல மறுப்பதுதான், இதல் உள்ள சுற்றி வளைப்பு. இதை சொல்ல மறுத்து, அதை வேறான கேள்வியாக்கிபடி, இதில் இருந்து அம்பேத்கர் விலகிச் செல்லுகின்றார். 

நாம் இந்த நூல் மூலம் இதை அணுகுகின்றோம். சுற்றி வளைக்காது விடையத்தை ஆராய்வதும், இதை தெளிவாக்குவதும், அவசியமானதாக உள்ளது. சாதி எப்படி, எந்த நிபந்தனைகளில், ஏன் தோன்றியது என்பதை தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது. இதனால் கடந்தகால சாதியம் பற்றிய பல முடிவுகளையும், கற்பனைகளையும் இயல்பாகவே மறுதலித்து விடுகின்றது.

சாதியம் பற்றிய ஆய்வுகளோ பல எழுந்தமானதாக இருக்கின்றது. அவை கற்பனைக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இவை எதுவும் தெளிவுபடுத்தப்படாத புதிராக இருக்கின்றது. இதைத் தேடிய போது, சாதியம் பற்றிய சில நூறு நூல்களை படிக்க வேண்டியேற்பட்டது. இறுதியாக நான்கு வேதங்களையும், அர்த்தசாத்திரத்தையும் முழுமையாக படிக்க வேண்டியேற்பட்டது. இதன் மூலமே சாதியின் தோற்றத்தையும், அதன் உண்மைகளையும் துல்லியமாக அணுகவும், அதை வெளிக்கொண்டு வரவும் முடியும் என்றும் கருதினேன்.

இவற்றை நான் படித்தபோது, ஆரிய-வேத மக்கள் பற்றிய பொதுவான மதிப்பீடே தவறாக கற்பிக்கப்பட்டு இருப்பது தெளிவாகியது. இப்படி அனைத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.

இந்த வகையில் இளம் அம்பேத்கரின் ஆய்வுகளின் அடிப்படையில், அதை சரி செய்தபடி சாதியத்தின் வேரை அடையாளம் காணமுடியும். சாதியம் தோன்ற முன்னும் தோன்றிய பின்னுமாக, சாதிய வரலாற்றை அதன் சமூக பொருளாதார உள்ளடகத்தில் இருந்து இதை புரிந்துகொள்ள முனைவோம்.

சுல்தான் படத்துக்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு!

சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை தயாரிக்க திட்டமிட்டது.

2008-ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009- ஏப்ரலில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இதுவரை வெளிவரவில்லை. தாமதமாவது தொடர்ந்ததால் ஒப்பந்தத்தை முறித்து, படத்திலிருந்து விலகிக் கொண்டது ரிலையன்ஸ்.

இப்போது சுல்தான் படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் சவுந்தர்யா. இதனை அறிந்த ரிலையன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அதில் பழைய பாக்கியை முடிக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும், உடனடியாக தங்களின் ரூ 11.59 கோடியை 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி ஆக்கர் ஸ்டுடியோ நிறுவனத் தலைவர் லதா ரஜினியிடம் கேட்ட போது, 'வழக்கெல்லாம் ஏதுமில்லை. பேச்சுவார்த்தை நடக்கிறது. அனைத்தும் சுமூகமாக முடிந்துவிடும்' என்றார்.

இந்நிலையில் வரும் மார்ச் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்காட்சியில் வருவது நித்யானந்தா இல்லை: ஆஸ்ரம நிர்வாகி, வழக்கறிஞர் பேட்டி

சென்னை, மார்ச் 4: நித்யானந்தா இருப்பது போல தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான படக்காட்சிகள் முற்றிலும் பொய்யானவை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்ம கிருபானந்தா, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மறுத்துள்ளனர்.


இது தொடர்பாக இவர்கள் இருவரும் சென்னையில் கூட்டாக நிருபர்களிடம் கூறியது:

கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஒளிப்பதிவுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நித்யானந்தத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் தொலைக்காட்சியினர் தங்களுக்கு கிடைத்த படக்காட்சிகளில் இருப்பவர் நித்யானந்தாதானா என்பதை எங்களிடம் கேட்டு உறுதிப்படுத்தவில்லை. அந்த காட்சிகளில் இருப்பது நித்யானந்தா இல்லை.

முதல்நாளில் அதில் வரும் பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டவர்கள் அடுத்தநாள் அவரது முகத்தை தெளிவாகக் காட்டினர். இதற்கு இடைப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?

இந்த படக்காட்சிகள் யாரால், எங்கு, எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி சார்பில் உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அந்த படக்காட்சியில் இருப்பவர் நித்யானந்தா இல்லை. ஆனால், இதை இப்போதைய சூழலில் நிருபிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.

அடையாளம் தெரியாத சிலர் நித்யானந்தா வேறு பெண்களுடன் இருப்பது போல கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இ-மெயில் மூலம் அனுப்பி வந்தனர். இவ்வாறு அனுப்பி எங்களை தொந்தரவு செய்த கும்பலே இந்த சதியின் பின்னணியிலும் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கண்டுபிடிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.

கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள நித்யானந்தா விரைவில் மக்கள் முன்பு தோன்றி இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சச்சின் சாதனை: இந்தியா ரன் குவிப்பு 401/3

குவாலியர், பிப்.24 (டிஎன்எஸ்) இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதத்தை தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார்.




குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் சார்லஸ் கவண்ட்ரி மற்றும் பாகிஸ்தானின் அன்வர் ஆகியோர் எடுத்த 194 ரன்களே அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.



இன்றைய ஆட்டத்தில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது.



இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி குவாலியரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. சச்சின் இரட்டை சதம் விளாசினார்.



இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதத்தை தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார். 147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். இது சச்சினுக்கு 442ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார். இந்த சாதனையை சச்சின் உடைத்தெறிந்தார்.



தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், சச்சினும் இறங்கினர். ஷேவாக், இன்று விரைவிலேயே அவுட் ஆகி விட்டார். 11 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களுடன் அவர் நடையைக் கட்டினார்.



இருப்பினும் சச்சினும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து பின்னி எடுத்து விட்டனர். சச்சினைப் போலவே தினேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



சிறப்பாக ஆடிய தினேஷ், 85 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். முதல் ஒரு நாள் போட்டியிலும் திணேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.



இந்தியா நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன் குவித்துள்ளது. முன்னதாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



147 பந்துகளில் அவர் 200 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 25 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.



சச்சின் 200 ரன்களுடனும் தோனி 68 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.



சச்சினின் இன்றைய ஆட்டம், புதிய உலக சாதனையையும் படைத்ததுடன், கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால்

ஓபன் மென்டார்: இணைய வழியில் இலவசக் கல்வி

ஓபன் மென்டார் (www.openmentor.net) என்பது புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை. எந்தப் பாடத்தையும், எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல் கற்கலாம்; அதே போல் கற்பிக்கலாம். 'யாவர்க்கும் இலவசக் கல்வி' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. இதனை சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் சென்னை ஆன்லைனும் இணைந்து வழங்குகின்றன.




ஆசிரியர் தினத்தையும் சென்னை ஆன்லைன் 13ஆம் ஆண்டுத் தொடக்கத்தையும் முன்னிட்டு, இந்த இ-கல்வி முறை, சென்னையில் உள்ள இரண்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-கல்வி முறையைச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது குமணன், 2009 செப்.5 அன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனத் தலைவர் நாகராஜன், அதன் பொது மேலாளர் முருகானந்தம், சென்னை ஆன்லைன் நிறுவனத் தலைவர் இல.ரவிச்சந்திரன், அதன் ஆசிரியர் அண்ணாகண்ணன், சேது பாஸ்கரா பள்ளியின் முதல்வர் செல்வகுமார், துணை முதல்வர் அமரேந்திரன், சேது பாஸ்கரா பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் சுதர்சன் சாந்தியப்பன்.... உள்ளிட்ட பலரும் பங்கேற்றார்கள்.



செப். 5 அன்று காலை 10 மணிக்குச் சென்னை அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன், ஆங்கில வழியில் 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குக் கணிதத்தில் நிகழ்தகவு குறித்துப் பாடம் நடத்தினார். அதே நாள் காலை 11 மணியளவில் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், மரபணுப் பொறியியல் குறித்துப் பாடம் நடத்தினார்.



இந்த இணையவழி வகுப்புகளை இரு பள்ளிகளிலும் உள்ள 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் திரை முன் அமர்ந்து கவனித்தார்கள். மாணவர்கள், ஆசிரியருடன் எழுத்து மூலமும் குரல் வழியாகவும் உரையாடினார்கள். கேள்வி கேட்டுப் பதில் பெற்றார்கள். சேது பாஸ்கரா பள்ளி மாணவர்கள், வெங்கடேஸ்வரா பள்ளியின் ஆசிரியர் பாடம் நடத்துகையில் திரையில் அவரை நேரடியாகப் பார்த்தே கற்றார்கள்.



பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் பற்பல பயன்கள் விளையும். இருந்த இடத்திலிருந்தே ஆசிரியர் பாடம் நடத்தலாம். அதை மாணவர்களும் இருந்த இடத்திலிருந்தே கவனிக்கலாம். இருவருக்கும் பயணம், நேரம், செலவு, அலைச்சல் மிச்சமாகும்.



இன்னொரு வசதி, ஒரு பள்ளியின் மாணவர்கள், வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட துறையில் ஆசிரியர்களின் நிபுணத்துவம், உலகம் முழுக்கப் பயன்படுகிறது. வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் உள்ள ஆசிரியர்களையும் இந்த வகையில் நம் உள்ளூர் மாணவர்களுடன் இணைக்க முடியும். வீடுகளில் இருந்து மாணவர்கள் கற்கும் போது, அவர்களின் பெற்றோரும் இந்த வகுப்புகளைக் கவனிக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் கல்வியின் வீச்சினை அவர்களும் அறிய முடியும்.



ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்கள், பல உண்டு. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் என்றே பல உண்டு. இத்தகைய பள்ளிகளுக்கு இந்தக் கல்வி முறை, அற்புத வரம் என்றே கொள்ளலாம். அவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இதனால் நிறைய பயன்கள் உண்டு.



வகுப்பறையில் மாணவர்கள் முன்பு நின்று வகுப்பு எடுக்கையில் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் கணினி முன் இருந்து, இணைய வழியில் கல்வி கற்பிக்கையில் மேலும் பல சாத்தியங்கள் உண்டு. ஆசிரியர் குரல் மூலமும் பேசலாம்; கரும்பலகையில் எழுதுவது போலவே, pen tablet என்ற கணிப் பலகையில் எழுதலாம்; ஒலி-ஒளிக் கோப்புகளைத் திரையிட்டுக் காட்டலாம்; பவர் பாய்ன்ட் முறையில் சில வகுப்புகளை நடத்தலாம்; அனிமேஷன், கிராஃபிக்ஸ் காட்சிகளையும் திரையில் காட்டலாம்; பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் விளக்க இந்தக் காட்சி வழிக் கற்பித்தல் பெரிதும் உதவும்.



இ-வகுப்பு இல்லாத நேரத்திலும் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பிப் பதில்களைப் பெறலாம். நல்ல அகலக்கற்றை வசதி இருக்குமானால், மாணவர்களும் ஆசிரியரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தே 'வீடியோ சாட்' மூலம் உரையாட முடியும். அத்தகைய வசதி, எல்லா இடங்களிலும் கிடைக்கும் காலமும் மிக அருகில்தான் உள்ளது.



ஆசிரியர் பயன்படுத்தும் கணினித் திரை, இணையம் வழியாக அனைத்து மாணவர்களின் கணினித் திரையில் தெரியும். அதேபோல், அவர் தன் கணினியில் செய்து காட்டும் அனைத்தும், மாணவர்களின் கணித் திரையிலும் தெரியும். இது, கிட்டத்தட்ட இணையவழி வகுப்பறை (Virtual Class Room) போன்றதே.



இப்படி எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்ட இந்த இ-கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களும் பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகங்களும் தங்களைத் தகவமைத்துக் கொண்டால் பெரிய கல்விப் புரட்சியே நிகழும் என்பது உறுதி. மாணவர்கள் மட்டுமின்றி, வேலைக்குச் செல்பவர்கள், இல்லத்தரசிகள், வாழ்நாள் முழுதும் படிப்பவர்கள் எனப் பலரும் இந்தக் கல்வியைப் பெறலாம். ஒவ்வொரு வகையான மாணவர்க்கும் அவர்களுக்கு ஏற்ற விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) மாணவர்கள், Java, C, Oracle, SAP, PHP, டாட் நெட் போன்ற பாடங்களைக் கற்கலாம்; கணக்கியல் மாணவர்கள் Tally, பரஸ்பர நிதி, வரி விதிப்பு, காப்பீடு போன்ற பாடங்களைக் கற்கலாம்.



மேலும் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், வாஸ்து உள்பட பல பாடங்களையும் இங்கு கற்றுத் தருகிறார்கள். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உரையாடக் கற்கலாம்; லினக்ஸ் இயங்கு தளத்தின் அடிப்படைகள், ·போட்டோஷாப், எக்ஸ்செல், வேர்ட், நேர மேலாண்மை, ஆளுமைத் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றையும் கற்கலாம்; இவை அல்லாமல் உங்களுக்கு ஏதும் புதிய பாடங்களைக் கற்க வேண்டும் என்றால் அது குறித்த உங்கள் ஆர்வத்தினையும் தெரிவிக்கலாம். அதற்கு உரிய ஆசிரியர்கள் கிடைத்ததும் அந்தப் பாடமும் கற்பிக்கப்படும். ஒரே மாணவர் எவ்வளவு வகுப்புகளில் வேண்டுமானாலும் சேர்ந்து பயன் பெறலாம்.



அதே போன்று ஏதேனும் ஒரு துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள், தாங்கள் அறிந்தவற்றைக் கற்றுத் தர வேண்டும் என விரும்பினால், அவர்களும் ஆசிரியர்களாக இதில் பங்கு பெறலாம். புகைப்படக் கலை, சமையல் கலை, தோட்டக் கலை, விவசாயம்.... என உங்களுக்கு எந்தத் துறையைப் பற்றியாவது ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இருக்குமானால் அவற்றையும் இந்தத் தளத்தின் மூலம் முழு உலகிற்கும் எடுத்துரைக்கலாம். இதில் கற்பவர்களுக்குக் கட்டணம் இல்லை; அது போலவே கற்பிப்பவர்களுக்கும் ஊதியம் இல்லை. ஆனால், ஒருவர் தன் முழு நேரத்தையும் இதற்குச் செலவிட வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்ற வகையில் வாரத்திற்குச் சில மணி நேரங்கள் செலவிட்டால் போதும். அவரது அறிவு, பலரின் உள்ளத்தில் ஒளிகூட்டும்.



இதற்கென்று தனிச் செலவு ஏதுமில்லை. மாணவர் நோக்கில், அவரிடம் ஒரு கணினியும் இணைய இணைப்பும், தலைப்பேசி (ஹெட்போன்) வசதியும் இருக்க வேண்டும். அகலக்கற்றை இணைய இணைப்பு (பிராட்பேண்ட்), அவசியத் தேவை. dialup இணைப்பு, இந்த இ-வகுப்புக்குப் போதாது. இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் போதும். அவர், இ-வகுப்புக்குத் தயார்.



அவர், www.openmentor.net என்கிற இணையதளத்திற்குச் சென்று தன் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொண்டு பதிய வேண்டும். அந்தத் தளத்தில் ஒவ்வொரு மாதமும், பல்வேறு விதமான பாடங்களில், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும். அதில் எந்தப் பாடங்களில் அவருக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதில் சேர்ந்து கற்கலாம். அவர் தேர்ந்தெடுக்கும் பாடம் நடைபெறும் வகுப்பு குறித்த தகவலை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.



பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் கிட்டதட்ட இதே முறைதான். அங்கு கணினி, இணைய இணைப்புடன் அரங்கு, ஒலிபெருக்கி வசதி, LCD Projector, திரை ஆகியவை இருந்தால் போதும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், ஒரே வகுப்பில் இணைந்துகொள்ளலாம்.



இணையவழி வகுப்பு மட்டுமின்றி, இணையவழித் தேர்வுகள் (online examinations) நடத்தும் வசதியும் இந்தத் தளத்தில் உள்ளது. எல்லாப் பாடங்களிலும், வினாக்கள் தரப்படும், 30 வினாக்களை மாணவர்கள் 30 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும். இது objective type questions என்று சொல்லப்படுகின்றது. எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது போன்ற மாதிரி வினாக்களினால் அவர்கள் தங்கள் திறமையையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும்.



இந்த இணையவழித் தேர்வு வசதியைச் செல்பேசி மூலமும் இலவசமாகப் பெறலாம். GPRS வசதியுள்ள செல்பேசி ஒன்றின் மூலம் இணையவழித் தேர்விற்கான மென்பொருளைத் தரவிறக்கினால் போதும். பிறகு தேவையான கேள்வித்தாள் தொகுப்பை Openmentor.net தளத்தின் மூலம் நீங்கள் அவ்வப்போது இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம்.



இதுதவிர, இதே இணையதளம் மூலமாக வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் பெறத் திட்டங்கள் வகுத்து வருகிறார்கள். கற்போர், தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்யலாம்; பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அந்த விவரங்களைக் கவனிப்பார்கள். அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை நேர்முகத்திற்கு அழைத்துப் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உண்டு. இந்த நேர்முகத்திற்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தும் விதமாக மாதிரி நேர்முகத் தேர்வுகளையும் இந்த இணைய தளம் வழங்கி வருகிறது.



முதலில் அடிப்படைக் கல்வி, துறை சார்ந்த படிப்புகள், மொழித் திறன், அது தொடர்பான ஆளுமைப் பயிற்சி, பின்னர் மாதிரி நேர்முகத் தேர்வு, பின்னர் வேலை வாய்ப்பு என அனைத்துச் சேவைகளையும் ஓபன் மென்டார்.காம் ஒருங்கிணைத்து அளிக்கிறது. இவை அனைத்தும் இலவசம் என்பது, நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், அதுவே உண்மை.



இந்த ஓபன் மென்டார்.காம் இணையதளத்தினை வடிவமைத்துள்ள சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனம், ISO 9001:2000 சான்றிதழ் பெற்றது; பல்வேறு மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. மென்பொருள் தரச் சோதனை, மென்பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட பல நிலைகளிலான சேவைகளை ஒரு கூரையின் கீழ் சாஃப்ட்ஸ்மித் நிறுவனம் அளித்து வருகிறது. வணிகக் கூரறிவுத் தீர்வுகள், செல்பேசி நுட்பச் சேவைகள், அயலகப் பணி ஒப்படைப்பின் மூலம் பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது. இதன் தலைவர் நாகராஜனும் பொது மேலாளர் முருகானந்தமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.



சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் கை கோத்துள்ள சென்னை ஆன்லைன்.காம், 1997 முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் முதன்மையான மாநகர இணையதளமாக விளங்குகிறது. 'வாழ்வை எளிதாக்கு' என்பதே சென்னை ஆன்லைனின் இலக்கு. ஏற்கெனவே 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் உள்பட, பல்கலைக்கழகங்கள் பலவற்றின் தேர்வு முடிவுகளையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது. கல்வியின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இதன் தலைவர் இல.ரவிச்சந்திரன் ஆழமாக நம்புகிறார்.



ஆசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள், நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள்.... உள்ளிட்ட ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். இந்த ஓபன் மென்டார் தளத்தினைப் பயன்படுத்த வாருங்கள். இதில் உங்கள் நண்பர்களையும் இணையுங்கள். கல்வி கற்க இனி எந்தத் தடையும் இல்லை என்ற செய்தியைப் பரப்புங்கள். பட்டணங்கள் முதல் பட்டி தொட்டிகள் வரை கல்விச் சுடர் ஒளிரட்டும்; அறிவு வெளிச்சம், அகிலம் எங்கும் பரவட்டும்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 'கிராமி' விருது


இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியரான ஏ.ஆர்.ரகுமானுக்கு மற்றோரு உலக அங்கிகாரம் கிடைத்துள்ளது.  உலக அளவில் இசைக்காக வழங்கப்படும் புகழ் பெற்ற 'கிராமி' விருது போட்டியில், இரண்டு பிரிவிகளில் ஏ.ஆர்.ரகுமான், 2 கிராமி விருதுகளை வென்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான சர்வதேச கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏன்ஜெல்ஸ் நகரில் 2010, ஜனவரி 31ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தபேலா மேதை ஜாகிர் உசேன், சரோத் மேதை அம்ஜத் அலி கான், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 'ஸ்லம் டாக் மிலினியர்' படம் சிறந்த இசைக்கான பிரிவு, சிறந்த பாடலுக்கான பிரிவும் என இரு பிரிவிகளில் போட்டியிட்டது.

சர்வதேச அளவிலான ஆங்கில திரைப்படங்களின் கடும் போட்டிகளுக்கிடையில் ஸ்லம் டாக் மிலினியர் படத்தில் சிறந்த இசையமைத்தற்கான விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். மேலும் சிறந்த சவுண்ட் டிராக் இசைக்கான விருது அதே படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ... பாடலுக்காக எ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச இசை விருதுகளில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகளை பெற்ற 4ஆவது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான். 2 விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை ஏ.ஆர்.ரகுமானையே சாரும்.

விருதை பெற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரகுமான் "கடவுள் இரண்டாவது முறையாக எனக்கு அருள் பாவித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் இந்திய இசைக் கலைஞர்கள் ரவிசங்கர், ஜாகிர் உசேன், விஸ்வ மோகன் பட், விக்கு வினாயக் ஆகியோர் கிராமி  விருதுகள் வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)
Feb 01, 2010

புலிகளின் தலைவர் மலேசியா ராஜன் கைது

கொழும்பு, ஜன.30 (டிஎன்எஸ்) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மூத்த தலைவராக திகழ்பவர் மலேசியா ராஜன். மலேசியா ராஜனை கடந்த ஜன.28 அன்று போலீசார் இலங்கை கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அவரை கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்ததாக அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர். இவர் பத்மநாதன் போல வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி விடுதலைப்புலிகளுக்கு அனுப்பும் பணியை செய்து வந்தார். மேலும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை கொழும்பு நகருக்கு அழைத்து வரும் பணியை செய்து வந்தார்.

முன்னதாக வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதன், மலேசிய ராஜன் பற்றி எல்லா தகவல்களையும் சிங்கள போலீசாரிடம் தெரிவித்ததன் பேரில் மலேசியா ராஜனை கைது செய்ய சிங்கள பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் வலை விரித்தனர்.

இந்த நிலையில் மலேசியா ராஜனை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மலேசியா அல்லது தாய்லாந்து நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 42 வயதாகும் இவருக்கு கண்ணன், செல்லத்துரை, சுப்பிரமணியம், சிவக்குமார், சாந்தகுமார் என்று பல பெயர்கள் உண்டு. (டிஎன்எஸ்)

Jan 30, 2010

சென்னை, பிப்.3 (டிஎன்எஸ்) 'அசல்' படத்தில் நாயகன் அஜீத்குமார் புகைப்பிடிப்பது போன்ற காட்சிக்கு பாமக சார்பில் கூறப்பட்ட புகாருக்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தரப்பில் நடிகர் பிரபு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்புமணிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

'அசல்' படத்தில் இடம் பெறும் புகை பிடிப்பது போன்ற காட்சி தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் எங்கள் பார்வைக்கு வந்தது. எங்கள் தந்தை சிவாஜி கணேசன் பெயரை தாங்கியுள்ள நிறுவனம் 50 வருட பாரம்பரியத்தை கொண்டது. எங்கள் தயாரிப்பான அசல் திரைப் படம் தணிக்கைக் குழுவினரால் உன்னிப்பாக பார்க்கப்பட்டு திரையிட தகுதியான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் தணிக்கைக்கு போவதற்கு முன்பே அதன் டிரைலர் படத்திலும், திரைப்படத்திலும் புகைப்பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது என்ற அறிவிப்பை படத்தின் துவக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்.

அஜீத்குமார் புகைப்பிடிப்பதனால் வரும் தீங்கை இந்த படத்தின் துவக்கத்திலேயே செய்தியாக அறிவித்திருக்கிறார். தணிக்கைக் குழு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டது அனைத்தையும் நிறைவு செய்திருக்கிறோம். எங்கள் தந்தையின் வழியில் எப்போதுமே இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து வருகிறோம். தமிழ் திரைப்படத் துறையின் நெருக்கடியை நன்கு உணர்ந்த தாங்கள் ஒரு இயக்கத்திற்கு பொறுப்பான தலைவராக இருப்பதால் எந்த திரைப்படத்திற்கும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இயக்குனர் சரண், நாயகன் அஜீத் சார்பில் இந்த பதிலை எழுதியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)

Feb 03, 2010